சென்னை - Chennai-Madras -ஒரு பயோ கிராபிகல்ஸ்

 நகர வரலாறு:
Parrys Corner in 1890 AD முன்னூறு வருட சரித்திரம். கடலோர கிராமங்களுக்கிடையில் கிழக்கிந்தியக் கம்பெனியினர் இறங்கி கி.பி. 1639ல் விஜயநகரின் கடைசி அரசர் சந்திரகிரி அளித்த நிலத்தில் மதராஸ்பட்டினத்தை ஸ்தாபித்தனர். 1644ல் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை நிறுவிய பின்னர் அதைச் சுற்றிலும் திட்டமில்லாமலே மெட்ராஸ் வளர ஆரம்பித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ்காரர்களின் பிடியில் முழுமையாக தென்னிந்தியா வந்த பின் மெட்ராஸ் அவர்களது நிர்வாக மற்றும் வியாபார தலைநகரானது.

தொடர்ந்து மிக வேகமாக வளர்ந்து இந்தியாவின் நான்கு பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. மெட்ராஸ் என்று உலகம் முழுவதும் பரிச்சயமான பெயர் 1996ல் சென்னை என்று அதிகார பூர்வ பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகர் அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்த சென்னப்ப நாயக்கரின் நினைவாக இப்பெயர் அமைந்தது.

நகர வழக்கங்கள்:
குளிர்காலத்தில் கூட 20 டிகிரி செல்சியஸுக்கு குறைவதில்லை. கடல் காற்றின் ஈரப்பதத்தால் கசகசப்பு இருந்தாலும் மா‍லை 4 மணிக்கு ‍மேல் கடலில் இருந்து நிலத்திற்கு வரும் காற்று இரவின் வெம்மையை வெகுவாக குறைக்கிறது. வருடம் முழுவதற்கும் வேனிர்கால உடைகளே போதுமானவை.

நாட்டின் பெரிய மெட்ரோக்களில் ஒன்று, ஆனாலும் கட்டுப்பெட்டித்தனமான நகரம் என்றிருந்த பெயர் தற்போது மாறி வருகிறது. இங்கு பேசப்படும் தமிழ் மற்ற இடங்களில் வாழும் தமிழர்களுக்கே புரியாத அளவு மொழி மாற்றம் அடைந்துள்ளது. ஆனால் இந்த பேச்சு வழக்கு சமூகத்தின் அடிமட்ட மக்களிடம் மட்டுமே பரவலாக உள்ளது.

நகரின் அமைப்பு:
நகரம் வடக்கு தெற்காக முதலில் விரிவடைந்தது, தற்போது மேற்கில் விரிவடைந்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே அகலமான சாலைகளைக் கொண்ட நகரமாக இருந்தாலும் நகரின் வளர்ச்சியினால் மிகுந்த நெரிசலும் புகை மாசும் நிறைந்த நகரமாக இருக்கிறது.

50களில் முக்கிய சாலையான அண்ணா சாலையில் (மவுண்ட் ரோடு) கட்டப்பட்ட 14மாடி கட்டிடமே இன்றும் சென்னையின் அடையாளம். தற்போது தான் அதை விட அதிக மாடிகள் கொண்ட கட்டிடங்கள் கட்டபட்டு வருகின்றன.


முக்கிய இடங்கள்:
மெரினா கடற்கரை:
உலகின் இரண்டாவது அழகிய கடற்கரை, தற்போது அளவுக்கதிகமான கூட்டத்தாலும், பிளாஸ்டிக் குப்பைகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் 5 கி.மீ. நீளத்திற்கு மிக லேசான வளைவுடன் இருக்கும் கடற்கரையின் அழகு அவற்றையும் மீறி வசீகரிக்கிறது. இதன் வடகோடியில் அறிஞர் அண்ணாவின் சமாதி உள்ளது.

மாமல்லபுரம் (மகாபலிபுரம்):
சென்னையிலிருந்து தெற்கு கடற்கரையோர சாலையில் சுமார் 60கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பல்லவ காலத்தில் செய்யப்பட்ட அற்புதமான பழங்காலச் சிலைகள் இந்த சிற்றூர் முழுதும் காணலாம். ஊர் முழுதும் பல்வேறு சிலை செய்யும் ஸ்தாபனங்கள் முளைத்துள்ளன. சிறப்பான சிற்பக் கலைஞர்கள் நிறைந்த ஊர். மாமல்லபுரம் செல்லும் சாலையில் பல்வேறு பொழுதுபோக்கு பூங்காக்கள் (Theme Parks) திறக்கப்பட்டுள்ளன.

வண்டலூர் மிருகக்காட்சி சா‍லை:
நகரின் மையத்தில் முன்பு அமைந்திருந்த மிருகக்காட்சி சாலை தற்போது நகரின் வெளியே பரந்த இடத்தில் மிருகங்கள் இயற்கையாக உலவும் வன்னம் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் கண்டு களிக்க ஏற்ற இடம்.

வள்ளுவர் கோட்டம்:
திருவள்ளுவரின் பெயரால் தமிழக அரசு அமைந்த கூடம். தேர் போன்ற வெளிப்புற அமைப்பு காணத்தக்கவை, உள்ளே திருக்குறளின் அனைத்து அதிகாரங்களும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.

 

மனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது

மனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது
ஆப்கானிஸ்தான் அதிபர் சொல்கிறார்


குவைத், ஏப்.30-

ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாயை கொல்ல நடந்த முயற்சியில் அவர் தப்பி பிழைத்தார். அவர் நேற்று குவைத் நாட்டுக்கு சென்றார். அந்த நாட்டில் இஸ்லாமிய பொருளாதார பேரவையின் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நமக்குள்ளேயே எதிரிகள் இருக்கிறார்கள். சிலர் மதத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். மனிதர்களை கொல்வதற்கு துன்புறுத்துவதற்கும் நம் மதத்தை பயன்படுத்துகிறார்கள். கல்வி அறிவு பெறுவதற்கு பதிலாக அவர்கள் அழிவு வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்காக முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட்டு போராடவேண்டும்.

இவ்வாறு கர்சாய் கூறினார்.

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=409627&disdate=4/30/2008

சுஜாதா குறித்து ஜெயமோகன்

சுஜாதா குறித்து ஜெயமோகன்
 
.
 
.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா குறித்து தன்னுடைய இணையதள பிளாக்கில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருப்பதாவது:

பல நட்சத்திர எழுத்தாளர்கள் இருந்தாலும் அவர்களெல்லாம் நிகழ்ச்சிகளாலும் கதைமாந்தர்களாலும் தான் வாசகர்களைக் கவர்ந்தவர்கள். மொழியின் நுண்ணிய விளையாட்டுகளாலேயே முற்றிலும் மனதை கவர்ந்தவர் சுஜாதா.மொழியில் புறவுலகை உருவாக்க முயலும் எந்தப் படைப்பாளியும் புறக்கணித்துவிட முடியாத முன்னோடி சுஜாதா.

.

சுஜாதாவின் முதல் கட்ட சாதனை அவரது நாடகங்களிலேயே புகழ்பெற்ற அமெரிக்க யதார்த்த நாடகங்களுக்கு பல வகையிலும் நிகரானவை அவை. யதார்த்த நாடகங்களுக்கு உரையாடலே உயிர். சுஜாதா உரையாடல் விற்பன்னர். சுஜாதாவை தமிழின் மிகச் சிறந்த சிறுகதையாசிரியர்களின் வரிசையிலேயே நான் என்றும் வைத்திருக்கிறேன். அனைத்தையும் சுருக்கிச் சொல்லும் அவரது பாணியும் காட்சி சித்தரிப்பின் ஜாலமும் சிறுகதைக்கு சரியாகப் பொருந்தி வருபவை. பிரமிப்பூட்டும் அவதானிப்புத்திறன் கொண்டவர் அவர். மொழியின் அனைத்து சாத்தியங்களையும் இயல்பாகத் தொட்டுவிடும் தேர்ச்சி அவருக்கு இருந்தது.
 

புதிய தமிழ்மணத்தில் எனக்கு ஏற்படும் பிரச்சனைகள்

மதிப்பிற்குரிய தமிழ்மண நிர்வாகிகளுக்கு கடந்த ஒரு வாரமாக என் தளத்தை தமிழ்மணத்தில் பிங் செய்யும் பொழுது புதிய தமிழ்மண பக்கங்களில் என் பதிவுகள் காட்டப்படுவது இல்லை.
 
ஆனால் பழைய தமிழ்மணப் பக்கங்களில் தெரிகிறது.நான் தங்களுக்கு தனிமடல்கள் அனுப்பியுள்ளேன்.ஆனால் என் குறைபாடு இதுவரை நீங்க வில்லை.
 
 
தயவு செய்து தமிழ்மண நிர்வாகிகள் இந்த குறையை சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
இப்படிக்கு
 
உங்கள் இஸ்லாம்

அபுமுஹை அவர்களின் பாதை மாறிய பயணங்கள்!!!!!!!!!!!!!

அபூமுஹை அவர்களுக்கு உமர் பதில்: பாதை மாறிய பயணங்கள்

அபூமுஹை அவர்களுக்கு பதில்: பாதை மாறிய பயணங்கள்

மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு நேர்க்காணலில் "இஸ்லாமை விட்டு வெளியேறி, வேறு மதத்தை பரப்புகிறவனை, இஸ்லாம் சட்டப்படி  கொல்லவேண்டும்" என்று அவர் சொன்ன கருத்து சரியானதா என்று கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் ( Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி:யார் தேசத் துரோகி?)  இதற்கு அபூ முஹை அவர்கள், ஜாகிர் நாயக் அவர்கள் சொல்வது சரியானது தான் இஸ்லாமில் இப்படித்தான் சட்டம் என்று ஒரு கட்டுரையை எழுதினார் ( மதம் மாறினால் மரண தண்டனை-1) . இதற்கு நான் மறுபடியும் ஒரு மறு உத்தரவு எழுதினேன். அபூ முஹை அவர்களுக்கு உமர் பதில்: * Conditions Apply (* நிபந்தனைகளுக்கு உட்பட்டது) .

நான் சொல்லாத விவரத்தைச் சொன்னதாக, அபூமுஹை அவர்கள் கற்பனை செய்துக்கொண்டு சில விவரத்தைச் சொல்லியுள்ளார்.

இந்த கட்டுரையில் அவர் சொல்லும் குற்றச்சாட்டு:

அரசியல், ஆட்சி, இராணுவம் போன்ற நாட்டை ஆளும் சட்டம் எல்லாம் காபிர்(Non-Islam) நாடுகள் தான் உருவாக்கின, இஸ்லாம் அதை சொல்லவில்லை என்று நான் சொன்னதாக அவர் சொல்கிறார். இதை அவர் எங்கேயிருந்து எடுத்தார் என்பதை அவரிடம் தான் கேட்கவேண்டும்.

இனி அவர் என்ன எழுதினார் என்பதை கவனிப்போம்.

 

அபூமுஹை அவர்கள் எழுதியது:

மதம் மாறினால் மரண தண்டனை-3
Source:
http://abumuhai.blogspot.com/2008/05/3_12.html 

முஸ்லிம்கள் இஸ்லாம் மார்க்கத்தின் சட்டங்களைக் கூறும் போது, அது இஸ்லாத்தின் சட்டமில்லை காஃபிர்களின் சட்டம் என்று சில பிற மத நண்பர்கள் கூறுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை அரசியல், ஆட்சி, இராணும் இன்னும் இவை போன்ற நாட்டைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான சட்டங்கள் அனைத்தும் இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை. காஃபிர்களே இச்சட்டங்களை வகுத்திருக்கின்றனர், இவையெல்லாம் காஃபிர் சட்டங்கள் என்பதால் இவற்றிலிருந்து முஸ்லிம்கள் உதாரணம் சொல்லக்கூடாது என்பது இஸ்லாத்தை விமர்சிக்கும் சிலரின் கூற்று.


அருமையான நண்பர் அபூ முஹை அவர்களே, நீங்கள் சொன்ன விவரங்கள் என் கட்டுரையில் எந்த இடத்தில் உள்ளது சிறிது விளக்குங்கள்.

காபிர் நாடுகள் தான் முதல் முதலில் அரசியல், ஆட்சி, இராணுவம்  போன்ற சட்டத்தை உருவாக்கின என்று நான் சொல்லியுள்ளேனா?

இஸ்லாம் இப்படிப்பட்ட சட்டத்தை உருவாக்கவில்லை அல்லது சொல்லவில்லை என்று நான் எங்கு சொல்லியுள்ளேன்?

ஏன் உங்கள் கட்டுரைகளை படிக்கும் அப்பாவி மக்களை (முஸ்லீம்களை) திசைத்திருப்புகிறீர்கள்.


 
அபூமுஹை அவர்கள் எழுதியது:

இவர்கள் எங்கிருந்து இவ்வாறு புரிந்து கொண்டார்கள்! அதனால் கீழ்கண்டவாறு விமர்சனத்தை எழுப்புகிறார்கள்.


11. காபிர்களின் (Non-Islam) சட்டத்தோடு, இஸ்லாம் சட்டம் சம்மந்தம் கலந்தது எப்படி?

பொதுவாக, இஸ்லாமியர்களின் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்து அரசியல் சாசன மற்றும் இதர சட்டங்களை விட இஸ்லாமிய சட்டமே மேலானது, இதில் மட்டுமே மனிதர்களை நல்வழிப்படுத்தும் சட்டங்கள் உண்டு.

ஆனால், எப்போதெல்லாம், இஸ்லாமின் ஒரு சில கொடுமையான சட்டத்தை நியாயப்படுத்த இஸ்லாமிய அறிஞர்கள் விரும்புவார்களோ, அப்போதெல்லாம், தயக்கமே இல்லாமல் "காபிர்களின்" சட்டத்தை மேற்கோள் காட்டவோ அதைப்பற்றி பேசவோ தயங்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, இஸ்லாமிய சட்டத்தோடு சம்மந்தம் இல்லாத காபிர் சட்டத்தை ஒப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒப்பிடுதலைத் தான் --- அவர்கள் செய்துள்ளார்கள்.

நான் மேலே சொன்ன தலைப்பே மிகவும் தெளிவாகச் சொல்கிறது. அதாவது, காபிர்களின் சட்டத்தோடு இஸ்லாமிய சட்டம் எப்படி சம்மந்தம் கலந்தது என்றேன்.காபிர்களின் சட்டம் தான் முதல், இஸ்லாமிய சட்டம் தான் அடுத்தது என்று நான் சொன்னேனா? மறுபடியும் ஒருமுறை படித்துப்பாருங்கள்.

அதாவது, காபிர்களின் சட்டம் குறைபாடுள்ளது, இஸ்லாமிய சட்டம் தான் உயர்ந்தது என்று ஓயாமல் சொல்லிக்கொள்ளும் நீங்கள், எப்படி இப்போது மட்டும் அவசியம் ஏற்படும்போது திடீரென்று இஸ்லாமிய சட்டத்தோடு, காபிர்களின் சட்டத்தை சம்மந்தப்படுத்தி பேசுகிறீர்கள் என்ற பொருளில் சொன்னேனே தவிர, நீங்கள் நினைப்பது போல் அல்ல.

 


அபூமுஹை அவர்கள் எழுதியது:

தேசத் துரோகம்

அதாவது, இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்துவதும், இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்கு விற்பதும் தேசத் துரோகம். என்ற சட்டம் காஃபிர்களால் இயற்றப்பட்டது. அதனால் முஸ்லிம்கள் இதை உதாரணம் காட்டிப் பேசுவது சந்தர்ப்பவாதம் என்று இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் சொல்கின்றனர். இவர்களின் வாதம் தவறானது. இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்தக்கூடாது, இராணுவ இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரிவிக்கக்கூடாது என மறைமுகமாக அல்ல, நேரடியாகவே இஸ்லாமும் கண்டிக்கிறது.

இஸ்லாம் இராணுவ சட்டத்தை இயற்றவில்லை என்று நான் சொல்லவே இல்லையே, உங்களுக்கு மட்டும் இப்படி புதுமையாக தெரிகின்றது.

என் கட்டுரையை சரியாக படித்துப்பாருங்கள், எதை நான் சந்தர்ப்பவாதம் என்று சொல்கிறேன் என்று புரியும். அதாவது, மதத்தை மாறுபவனுக்கு மரண தண்டனை இஸ்லாமில் உள்ளதால், காபிர்களின் சட்டத்தை உதாரணம் காட்டும் நீங்கள், மற்ற இஸ்லாமிய சட்டத்தோடு காபிர்களின் கட்டத்தை ஒப்பிட்டுப்பேச தயாரா? என்று கேட்டேன் அவ்வளவு தான்.

 

அபூமுஹை அவர்கள் எழுதியது:

இதைப் பார்ப்பதற்கு முன்,

உலகில் எல்லா நாடுகளும் தன் நாட்டின் தகுதிக்கேற்றவாறு இராணுவம் வைத்திருக்கும். இதற்கு முஸ்லிம் நாடுகள், காஃபிர் நாடுகள் என்ற விதிவிலக்கு எதுவுமில்லை. எதிரி நாட்டுடன் சண்டையிட நேர்ந்தால் நட்பு நாட்டின் இராணுவ உதவியை நாடுவதுண்டு. இதற்கும் காஃபிர் நாடுகள், முஸ்லிம் நாடுகள் என்ற வேற்றுமை இல்லை!

இராணுவத்தில் பணியாற்றும் ஒரு சாதாரண போராளியும், வெளிப்படுத்தக்கூடாத இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தினால் அது தேசத்துக்கே ஊறு விளைவிக்கும் தேசத் துரோகம் என்பதில் எந்த நாட்டின் இராணுவச் சட்டத்திலும் மாற்றுக் கருத்து இல்லை. அது காஃபிர் நாடாகவோ, முஸ்லிம் நாடாகவோ இருந்தாலும் சரியே, இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்துவது தேசத் துரோகம் என்றே இஸ்லாமும் கூறுகிறது.
.....
.....
.....


தேசத்துரோகத்திற்கு மரண தண்டனை கொடுப்பது தவறு என்று நான் எழுதவில்லை, தேசத்துரோகத்திற்கு இஸ்லாமிய சட்டமோ, அல்லது காபிர் நாடுகளின் சட்டமோ, மரண தண்டனை விதிப்பது தவறானது என்று கூட‌ நான் எழுதவில்லை.

ஒரு மனிதன் மதத்தை மாற்றிக்கொள்ளும்போது, அவனுக்கு மரண தண்டனை சரியா? என்பது தான் என் கேள்வி. மற்றும் மதத்தை மாற்றுபவனுக்கும், தேசத்துரோகம் செய்பனையும் ஏன் சம்மந்தப்படுத்துகிறார், ஜாகிர் நாயக் அவர்கள் என்பது தான் என் கேள்வி, அவ்வளவே.

 

அபூமுஹை அவர்கள் எழுதியது:

மேலும், இராணுவச் சட்டங்கள் காஃபிர்கள் இயற்றியது என்று தவறாக வாதமெழுப்பும் பிற மத நண்பர்களின் கவனத்திற்கு,


இராணுவம் மற்றும் தேசத்துரோகம் சம்மந்தப்பட்ட சட்டங்கள் காபிர் நாடுகள் தான் இயற்றினார்கள் என்று எங்கே நான் சொல்லியுள்ளேன்? ஏன் நான் எழுதிய கட்டுரையின் "பாதையை மாற்றி பயணத்தை" திசை திருப்ப பார்க்கிறீர்கள்?


அபூமுஹை அவர்கள் எழுதியது:

இராணுவ இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துவது தேசத் துரோகம் மட்டுமல்ல, இஸ்லாமிய ஆட்சியின் இராணுவப் போர் நடவடிக்கைகளை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துபவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி வேறு மதத்தைத் தழுவி விட்டாரோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்திவிடும் என்பதை ஹாத்திப் (ரலி) அவர்களின் வாக்கு மூலத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

எனவே, இஸ்லாமிய ஆட்சி என்று அறிவித்துக்கொண்ட முஸ்லிம் நாடுகளிலும் இராணுவம் உண்டு. அந்த இராணுவத்திற்கும் இஸ்லாமிய சட்டத் திட்டங்களைக் கடைபிடிக்கும் விதிகள் உண்டு. அதனால் காஃபிர்களின் சட்டத்தோடு இஸ்லாமிய சட்டம் கலந்ததாகச் சொல்வது வெறும் கற்பனை.

(தேசத் துரோகம் என்பதற்கு வேறு சில அளவுகோலையும் வைத்துள்ளனர் அவற்றையும் அடுத்துப் பார்ப்போம்)

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை
 

இஸ்லாமிய நாடுகளுக்கு தனியான இராணுவம் இருக்காது என்று நான் சொல்லவில்லை, அப்படி இருக்கும் இராணுவத்திற்கு தனியான இஸ்லாமிய சட்டங்கள் இருக்காது என்று கூட நான் சொல்லவில்லை.

நான் எழுதிய கட்டுரையின் பயணமெல்லாம், ஒரு மார்க்கத்தில் ஒரு குற்றத்திற்கு கொடுக்கும் தண்டனையை மற்ற மார்கத்தோடு அல்லது நாடுகளின் சட்டத்தோடு சம்மந்தப்படுத்திப் பேசும் போது, அதே குற்றத்தை ஒப்பிடவேண்டுமே ஒழிய, தலைக்கும் காலுக்கும் முடி போடக்கூடாது.

இஸ்லாமில் திருட்டிற்கு உள்ள தண்டனையை நியாயப்படுத்த நாம் முயற்சி எடுக்கும் போது, நாம் என்ன செய்யவேண்டும்? மற்ற காபிர்களின் சட்டத்தில் திருட்டிற்கு என்ன தண்டனை உண்டு என்று பார்த்து அதோடு ஒப்பிட்டால், மக்களுக்கு நன்றாக புரியும். ஒரே குற்றத்திற்கு இரண்டு மார்க்கங்களில் உள்ள தண்டனைகளை ஒப்பிட்டு பார்த்தால், நியாயமானதாக இருக்கும்.

அது போல, இஸ்லாமில் "மத மாற்றத்திற்கு" கொடுக்கும் தண்டனையை நியாயப்படுத்த விரும்பினால், மற்ற நாடுகளில் "மத மாற்றத்திற்கு" என்ன தண்டனை உண்டு என்பதை கண்டுபிடித்து ஒப்பிடவேண்டும். அதை விட்டுவிட்டு, காபிர் நாடுகளில் "எந்த குற்றத்திற்கு மரண தண்டனை" உண்டு என்று கண்டுபிடித்து அதோடு ஒப்பிட்டால் அது எப்படி சரியாக இருக்கும் என்று தான் நான் கேட்டேன்.

உடன்கட்டை ஏறுதலும், இஸ்லாமிய மத மாற்ற தண்டனையும்:

ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன், இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த "உடன்கட்டை ஏறுதல்" என்ற பழக்கம் ஒரு சட்டமாக இந்தியாவில் இன்று அமுலில் உள்ளது என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.

உடன் கட்டை ஏறுதல் என்ற சட்டம் சரியானதா? கணவன் மரித்துவிட்டால் அப்பெண்ணுக்கு மறுமனத்திற்கு வாய்ப்பு அளிக்கவேண்டுமே ஒழிய, இப்படி சாகடிக்கலாமா? என்று நீங்கள் கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

இதற்கு ஒரு இந்து அறிஞர் கீழ்கண்டவாறு பதில் சொல்கிறார் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்:

பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளில் "ஒரு மனிதன் இஸ்லாமைவிட்டு வெளியேறினால், அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது, அதுபோல, ஒரு பெண்ணுக்கு தன் கணவன் மறித்துவிட்டால், அவளுக்கு இந்து தர்மப்படி மரண தண்டனை தரவேண்டும், அதாவது கணவனோடு அவளையும் எரித்து கொன்றுவிடவேண்டும். தன் கணவன் மரித்துவிட்டால் அப்பெண் வேறு ஒரு ஆணை மறு திருமணம் செய்துக்கொண்டால் அது மரித்த கணவனுக்கு செய்யும் துரோகம் ஆகும், எனவே, இது நியாயமான தண்டனைத் தான்."

இதை படித்தவுடன் உங்களுக்கு சிரிப்பு வந்து இருக்கும், உடன் கட்டை ஏறுதலுக்கும், மதமாற்றத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கத்தோன்றும். இந்த உதாரணத்தில் குற்றம் ஒப்பிடப்படவில்லை, ஆனால், தண்டனை ஒப்பிடப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், கணவன் மரித்துவிடுவது என்பது குற்றமே இல்லை. அது போல, மதத்தை மாற்றிக்கொள்வது குற்றமே இல்லை.  இந்த உதாரணம் போலத்தான் ஜாகிர் நாயக் அவர்களும் உதாரணத்தைச் சொன்னார் என்று நான் குறிப்பிட்டேன்.
 
எனவே, அருமை நண்பர் அபூமுஹை அவர்களே, முதலில் நான் சொன்னதை முழுவதும் படித்து  புரிந்துக்கொண்டு எழுதுங்கள்.

யாருக்கு பதில் அல்லது யாருடைய கட்டுரைக்கு பதில் எழுதுகிறீர்கள், அபூ முஹை அவர்களே:

என் கட்டுரையைப் பற்றி பதிலோ விமர்சனமோ எழுதினால், அதன் தொடுப்பு தரவேண்டுமென்று, நான் ஏற்கனவே என் முதல் கட்டுரையில் சொல்லியுள்ளேன்.

நீங்கள் ஒன்றும் என்னைப்போல நேற்று பொழிந்த மழையில் முளைத்த காலான் அல்ல. உங்களுக்கு இணையத்தில் எப்படி கட்டுரையை எழுதவேண்டும் என்ற எல்லா விவரங்களும் தெரியும், இப்படி தெரிந்து இருந்தும், ஏன் என் வரிகளுக்கு பதில் அளிக்கும் போது, என் கட்டுரையின் தொடுப்பை தருவதில்லை.

எங்கள் கட்டுரைகளை படித்தால், இஸ்லாமியர்கள் இஸ்லாமை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்ற பயமா? அப்படி பயம் இல்லையானால் ஏன் தொடுப்புக்களை தருவதில்லை? எனக்கு பதில் அளிக்கும் போது, என் வரிகளை விமர்சிக்கும் போது, என் கட்டுரை வெளியாகும் ஒரு தளத்தின் தொடுப்பையும் கொடுக்காமல் பதில் எழுதுவது என்ன நாகரீகம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இனி என் எல்லா பதில்களில் இந்த வரிகள் தொடரும் என்று சொல்லிக்கொள்கிறேன்.

முடிவுரை: நான் எந்த இடத்தில் "காபிர்கள் தான் அரசியல், ஆட்சி, இராணுவம் பற்றிய சட்டங்களை இயற்றினார்கள், இஸ்லாமில் இப்படிப்பட்ட சட்டமில்லை, அல்லது இஸ்லாமோடு இப்படி ஒப்பிடக்கூடாது என்றுச் சொன்னேன்" என்பதை தயவு செய்து தெரிவியுங்கள்.

ஒரே குற்றத்தை(தண்டனைகளை அல்ல) இரண்டு மார்க்கங்களிலும் ஒப்பிட நீங்கள் தயாரா? உங்கள் ஷரியா சட்டம் மற்ற காபிர்கள் சட்டத்தைவிட எவ்விதத்தில் உயர்ந்தது, சமுதாயத்திற்கு ஏற்றது என்று ஒப்பிட்டு கட்டுரை எழுதுவீர்களானால், மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

 

http://isakoran.blogspot.com/2008/05/blog-post.html

ஷாருக்கான் தன் டீமை விற்கப்போகிறாராம்.?

 





http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/23/015/23_05_2008_015_009.jpg

சிறுமியை மணந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றவர் கைது

 

சிறுமியை மணந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றவர் கைது
சென்னை: சிறுமியைக் கல்யாணம் செய்து அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாக 45 வயது நபரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த சிறுமி பவித்ரா (15). பத்தாவது வகுப்பு மாணவியான இவர் சென்னை புறநகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 18ம் தேதி முதல் காணவில்லை.

இதுகுறித்து போலீஸில் பவித்ராவின் பெற்றோர் புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில், பவித்ராவை ஆயிஷா மற்றும் அவரது கூட்டாளி சதீஷ் ஆகியோர் கடத்தினர். பின்னர் கோவையைச் சேர்ந்த அப்துல் என்பவரிடம், ரூ. 50 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு விற்றுள்ளனர்.

சிறுமியை விலை கொடுத்து வாங்கிய அப்துல் அவரை கல்யாணம் செய்து கொண்டார். பின்னர் பவித்ராவை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றார்.
இதையடுத்து அவரிடமிருந்து பவித்ரா தப்பினார். பின்னர் கோவையில் உள்ள காவல் நிலையத்தை அவர் அணுகினார்.

அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர் கடத்தப்பட்டு விற்கப்பட்டு, அவரை அப்துல் கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

பெருங்களத்தூரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து அப்துல், பவித்ராவை திருமணம் செய்து கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் அப்துல்லைக் கைது செய்தனர். ஆயிஷாவையும், சதீஷையும் வலை வீசி தேடி வருகின்றனர்.
 
http://thatstamil.oneindia.in/news/2008/05/17/tn-45-year-old-arrested-for-marrying-minor.html

எழுத்தாளர்களின் விஞ்ஞானி சுஜாதா

எழுத்தாளர்களின் விஞ்ஞானி
 
.
 
.
களைப்புற்று வீடு திரும்புகையில் துணுக்குற வைத்தது சுஜாதாவின் அந்திம செய்தி. அயர்வின் உச்சத்தோடு அறைக்குள் நுழைந்ததும் கண்ணில் பட்டது "கற்றதும் பெற்றதும்' தொகுப்பு.
.
அழுத்தமான இலக்கியங்களை படித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், இவைதான் இலக்கியம், இவற்றை மீறி எதுவும் சொல்லிவிட முடியாது என்ற ஒரு கருத்தை கொண்டிருந்த நேரத்தில் தற்செயலாக கையில் கிடைத்தது "பிரிவோம் சந்திப்போம்' நாவல்.

கவிதை தனமான தலைப்பாக இருக்கிறதே, வழக்கமான காதல் கதையாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தோடு உள்ளே நுழைந்தேன். கதையின் களம் என்னவோ கம்பன் முதல் இன்றைய குப்பன் வரை தொடும் காதல்தான். ஆனால் அதன் கட்டுமானம் காளிதாசனின் சாகுந்தலத்தையும், ராகுல்ஜியின் வோல்கா முதல் கங்கை வரை நாவலையும் சமவிகிதத்தில் கலந்திருந்தது.

அட, இத்தனை நாள் சுஜாதாவை படிக்காமல் இருந்துவிட்டோமே என்று தேடி துழாவி அவரது நாவல்கள் அனைத்தையும் கரைத்து குடிக்க ஆரம்பித்தேன். ஒரு மனிதனின் பால்ய காலம் என்பது அவனது அந்திம பயணம் வரை உடன் வரும் ஒன்று. இதனை உலகின் ஆகப்பெரும் படைப்பாளிகள் அனைவரும் தங்களது படைப்புக்களில் கையாண்டுள்ளனர்.

இதனை சுஜாதாவின் எழுத்துக்களில் எந்தவிதமான படைப்புக்களிலும் நாம் இனம் காண முடியும். ஸ்ரீரங்கத்து தேவதைகள் கதையில் வரும் மாந்தர்கள் கோவிந்துவும், பாச்சு மணியும் வேறு யாருமல்ல நம்முடைய வாழ்க்கையில் நாம் கடந்து வந்த பால்ய கால தோழர்கள் தான்.

காதலிக்கு கடிதம் கொடுக்கும் ஒரு சம்பவத்தை மட்டுமே ஒரு முழுக் கதையாக மாற்ற முடியும் என்பதற்கு அந்த தொகுதியில் இடம்பெற்ற மாளவிகா கதை ஒரு உதாரணம்.

சுஜாதாவை விதந்தோதும் வாசக வட்டம் கூட அவரது நாவல்கள், சிறுகதை தொகுதிகளோடே நின்று விடுகிறார்கள். தமிழ் இலக்கிய மரபான இயல்,  இசை, நாடகம் என்பதில் நாடக தந்தை பம்மல் சம்பந்த முதலியார் தொடங்கிய அத்தியாயம், நடுவில் இருண்ட காலமாய் முடிந்துவிட்டது.

அதனை மீட்டெடுத்தவர்களில் முக்கியமான ஒருவராக சுஜாதாவை கூறலாம். அவரது அங்கத படைப்பான குதிரை ஆகட்டும், சமூக அக்கறையை அடிப்படையாக கொண்டு வைணவ மரபில் படைக்கப்பட்ட மாஞ்சு ஆகட்டும் எந்த விதத்திலும் ஐரோப்பிய நாடகங்களுக்கு குறைவல்ல.

அதேபோன்று கட்டுரை வரிசையில் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகள் ஒரு அகராதியாக போடும் அளவிற்கு பன்முக தன்மை கொண்டதாகவும், செறிவுடனும் அமையப்பெற்றவை.

தீவிர இலக்கியவாதிகள் என்றால் பழமையை நிராகரித்து இலக்கணங்களை உடைத்து புதுமைகளை படைக்க வேண்டும் என்று சிலர் நினைத்து வந்த நேரத்தில், சங்ககால செவ்வியல் படைப்புகளையும், சாமான்யனுக்கும் புரியும் வகையில் எடுத்துரைத்த முயற்சி தீவிர இலக்கிய வட்டாரத்தில் ஒரு அதிர்ச்சி.

ஆனால் அதன் உள்ளடக்கம் குறித்து பல்வேறு விமர்சன கூறுகள் எழுந்ததை நாம் புறந்தள்ள முடியாது. ஆனால் ஒரு படைப்பாளன் எந்த கணத்தில், எந்த படைப்பூக்கத்தோடு ஒரு வரியை எழுதினான் என்பதை அதே தளத்தில் வாசகன் புரிந்து கொள்வதென்பது முடியாத ஒன்று.

கவிஞனுக்கு யானையாக தெரிவது, வாசகனுக்கு மேகமாக இருக்கலாம். அதுபோல புறநானூறு உள்ளிட்ட சங்கப் பாடல்களை தன் பார்வையில் நவீன தமிழ் படுத்தியவர் சுஜாதா.

அதேபோன்று இலக்கிய தரமான படைப்புகளை சுஜாதா படைத்தவர் அல்ல. ஒரு கதையின் கட்டுமானம் சார்ந்து வித்தை காட்டக்கூடியவர் என்று அவர் மீது விமர்சன கணைகளை எழுத்தாளர்களும் பல சமயங்களில் கூறியதுண்டு.

பாரதியின் படைப்புகளையே இந்துத்வ நோக்கோடு பார்ப்பவர்கள் இங்கு பலருளர். இதில் சுஜாதா மட்டும் விதிவிலக்கா என்ன? அவர்கள் பார்வையிலேயே சொல்வதாக இருந்தால் கூட நிச்சயமாக ஆகச் சிறந்த இலக்கிய படைப்பு என்று எதையும் சுஜாதா எழுதியவரல்ல.

ஆனால் காலம் காலமாக மொன்ணை எழுத்துக்களோடு முயங்கிக் கொண்டிருந்த கதையோட்டத்தை கூரான உரையாடல்கள் மூலம் செதுக்கியவர் சுஜாதா.

ஒரு முழுநீள பக்கத்திற்கு விளக்க வேண்டிய விஷயத்தை கதாபாத்திரங்களின் ஊடாக ஒரே வார்த்தையில் தெளிவுப்படுத்தும் யுத்தியை தமிழுக்கு கொண்டு வந்தவர் சுஜாதா.

அச்சுக்களில் மட்டுமே இயங்கி வந்த படைப்புகளை இணையத்தில் முதன் முதலில் ஏற்றிய பெருமை சுஜாதாவையே சாரும். காரணம் அவரது கல்வி அறிவு இதற்கு பின்புலமாக இருந்தால் கூட, கால மாற்றத்திற்கு ஏற்ப தன்னை புதுப்பித்துக் கொள்ளும் மனப்பான்மை தான் இதில் முதன்மையாக இருந்தது.

உதாரணத்திற்கு பல சிறு கதைகளை விளம்பர உரையாடல்களை கொண்டும், எஸ்எம்எஸ் தகவல்கள் போலவும் அவர் எழுதியிருந்ததை சொல்லலாம். இவரை பார்த்து அதே மொழி நடையில் எழுத வந்தவர்கள் ஒரு சிலர் என்றால், இவரது தொழில்நுட்ப வழியில் நடைபயின்றவர்கள் பலருளர். இதற்கு உதாரணமாக இணையம் எங்கும் கொட்டிக்கிடக்கும் தமிழ் வலைப்பூக்களை சொல்லலாம்.

வாசகத் தேவை பூர்த்தி செய்து அதன் மூலம் வாசகர் வட்டத்தை பெருக்கிக் கொண்டவர் சுஜாதா என்ற சிறப்பு வசை மொழியும் இவருக்கு சூட்டப்படுவது உண்டு. அப்பொழுதெல்லாம் அதற்கு போர் வாளாக எதிர்பாளர்கள் தூக்கி வருவது சினிமாவில் சுஜாதா என்ன எழுதி கிழித்துவிட்டார் என்ற சொல்லாடல்களைதான்.

சமரசம் செய்து கொள்வது என்பது  தோல்வியை தழுவுவது அல்ல. அது ஒரு போர்முறை என தனக்கு நெருங்கிய நண்பர்களிடத்தில் சுஜாதா கூறிவந்துள்ளார். ஆனால் அதனை ஒருபோதும் தனது எதிர்பாளர்களிடம் அவர் தெரிவித்தது இல்லை.

குழாம் அமைத்து சண்டையிடும் முற்போக்கு இலக்கிய கோதாவில் ஒருபோதும் இறங்கியவர் அல்ல சுஜாதா. ஆனால் அதனை ரசித்து பல இடங்களில் தனது கட்டுரைகளில் தெரிவித்துள்ளார்.

விகடன், குமுதம் போன்ற வெகுஜன பத்திரிகைகளில் தீவிர எழுத்துக்களையும், கணையாழி போன்ற சிற்றிதழ்களில் விஞ்ஞானம் சார்ந்த கட்டுரைகளையும் எழுதி வியப்புக்குள்ளாக்கியவர் சுஜாதா.

வாழும் போதே ஒரு கலைஞன் அங்கீகரிக்கப்பட வேண்டும். இது பெரும்பாலான கலைஞர்களுக்கு, படைப்பாளிகளுக்கு வாய்ப்பதில்லை. அந்த வகையில்  எழுத்தாளர்கள் மத்தியிலும், வாசகர்கள் மத்தியிலும் அங்கீகரிக்கப்பட்டவர் சுஜாதா.

எழுத்தாளர்களில் விஞ்ஞானியாய், விஞ்ஞானிகளின் எழுத்தாளராய் இருந்தவர் சுஜாதா.
 
க.அரவிந்த் குமார்

 

 

தன் திருமணத்தை நிறுத்திய 11 வயது சிறுமி-கதறி அழும் இவளை பாருங்கள்

 








http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/16/010/16_05_2008_010_005.jpg

ஆபாச விளம்பரத்தை மத்திய அரசு தடை செய்தது




ஆபாச விளம்பரத்தை மத்திய அரசு தடை செய்தது




தமிழ் இலக்கிய உலகில் சுஜாதாவின் இடம் என்ன என்பது சுவாரசியமான கேள்வி

 

 

தமிழ் நடையில் தடம் பதித்தவர்

.
.
எழுத்தாளர் சுஜாதா அவரது எழுத்தைப் போலவே இளமைத் துடிப்புடன் வாழ்ந்து மறைந் திருக்கிறார். 70 வயதை கடந்த நிலையிலும் தனது உடலை வாட்டிய நோய்களை பொருட்படுத்தாமல், அவர் துடிப்புடனே எழுதியும் செயல்பட்டும் வந்தார்.
பெயரும் புகழும் சம்பாதித்துவிட்ட நிலையிலும் தளராத உற்சாகத்துடன், தமிழ் வாசகர்களுக்கு தான் அறிந்தவற்றை சொல்ல வேண்டும் என்ற உணர்வோடு எழுதி வந்திருக்கிறார்.
.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் தீவிரமாக இயங்கி வந்த சுஜாதாவை எந்த அடைமொழிக்குள்ளும் அடக்கி விட முடியாது.

ரங்கராஜன் என்னும் இயற்பெயர் கொண்ட அவர், தனது மனைவி "சுஜாதா' பெயரை புனைப்பெயராக எழுதத் தொடங்கிய காலத்தில் ஒரு ஜனரஞ்சகமான எழுத்தாளராகவே அறியப்பட்டார். தனக்கென தனித்துவமிக்க ஜனரஞ்சக எழுத்தாளர்.

குமுதத்தில் தொடராக வெளி வந்த முதல் நாவலான "நைலான் கயிறு' மூலம் வாசகர்கள் மத்தியில் பிரபலமான "சுஜாதா', பெல் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய படியே பத்திரிகைகளில் எழுதி குவித்த வேகம் அசாத்தியமானது.

சுஜாதா எழுதாத தமிழ் பத்திரிகைகளே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு தமிழ் எழுத்துலகில் அவரது கொடி பறந்தது.

"கணேஷ்வசந்த்' பாத்திரங்களை பிரபலமாக்கிய சுஜாதா, இன்னொரு பக்கம் ஸ்ரீரங்கம்
எஸ்.ஆர். என்னும் பெயரில் "கணையாழி' இலக்கிய பத்திரிகையில் கனமான விஷயங் களை தனக்கே உரிய இலகுவான நடையில் எழுதி வந்தார்.

அவரது இலக்கிய முகம் வெகுஜன வாசகர்களுக்கு தாமதமாகவே அறிமுகமானது. அதற்கு முன்பாகவே அறிவியல் சார்ந்த விஷயங்களை எளிமையாகவும் சுவையாகவும் சொல்லக் கூடியவராக அவர் அறியப்பட்டார்.

அவருடைய நவீன தமிழ் நடை இதற்கு உதவியாக இருந்தது. "கம்ப்யூட்டர்' என்பது ஒரு சொல்லாக கூட அறிமுகமாகாத காலத்திலேயே அவர் சிலிக்கான் பற்றியும், கம்ப்யூட்டர் பற்றியும் எழுதியது வியப்புரிக்குரியது.

அற்புதமான அறிவியல் புனை கதைகளையும் எழுதியதோடு, விஞ்ஞானத்தின் சமகால போக்கை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்த வண்ணம் இருந்தார்.
நாவல்கள் எழுதுவதில் கொஞ்சம் இடைவெளி விட்ட சுஜாதா, பின்னர் புதிய வேகத்தோடு
எழுதத் தொடங்கினார்.

இடையே மெக்சிகோ சலவைக்காரி ஜோக் தனக்கு தெரியும் என்று சொல்லி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கவும் அவரால் முடிந்தது. கனவு தொழிற்சாலை, ஸ்ரீரங்கத்து தேவதைகள், பதவிக்காக, மோதிரக் கதைகள், கொலையுதிர் காலம், வசந்தகால குற்றங்கள் என்றும் எழுத முடிந்தது.

விஞ்ஞானம் பற்றி எழுதி வந்த சுஜாதா, தனது சாதாரண நாவல்களில் கூட போகிற போக்கில் உலக விஷயங்களையும், பிரபலமான ஆளுமைகளையும் குறிப்பிட்டபடி இருப்பார்.

 இப்படி வைரக் கடத்தல் பற்றிய கதையில் ஒற்றை வரியில் "டி பியர்ஸ்' நிறுவனம் பற்றி எழுதி வருவார். கணேஷ் விடுமுறைக்காக படிக்க டால்ஸ் டாயின், வார் அண்டு பீஸ் நாவலை எடுத்து வைத்துக் கொண்டான் என்று எழுதுவார்.

இப்படி நல்ல வாசகர்களுக்கு தனது நாவலில் அவர் ஆங்காங்கே பொறி வைத்திருப்பார். அதை பிடித்துக் கொண்டால் வாசகர்கள் தீவிரமான விஷயங்களை தெரிந்து கொள்ளும் பயணத்தை மேற்கொள்ள தொடங்கலாம்.

பின்னர் கணையாழியில் எழுதியது போலவே, பிரபலமான பத்திரிகை களிலும், இலக்கிய விஷயங்களை எழுதத் தொடங்கினார். ஞானக் கூத்தனின் கவிதைகளையும், சுந்தர ராமசாமியின் புளிய மரத்தின் கதையையும், நகுலனின் நினைவுப் பாதையையும், தி.ஜானகிராமனின் கட்டிப்போடும் தமிழ் நடை பற்றியும் அவர் சராசரி வாசகர்களுக்கு அறிமுகம் செய்தார்.

இசங்களின் பெயரில், தமிழில் இலக்கிய உலகில் பலர் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த போது, சுஜாதா ஆரவாரமே இல்லாமல் உலக இலக்கியம் பற்றி எழுதிக் கொண்டிருந்தார்.
அவர் சுட்டிக்காட்டி பிரபலமான இளம் கவிஞர்களும் உண்டு. மனுஷ்ய புத்ரன், மகுடேஸ்வரன் போன்றோர் இதற்கு உதாரணம். அவர் கை காட்டிய புத்தகங்களின் பின்னே ஆயிரக்கணக்கான வாசகர்கள் படையெடுக்க தயாராக இருந்த நிலையிலும் சுஜாதா "விமர்சனம்' என்ற மகுடம் தரித்துக் கொள்ள விரும்பியதில்லை.

நல்ல விஷயங்களுடனான எனது பரிச்சயத்தை பகிர்ந்து கொள்வதே எனது பணி என அவர் செயல்பட்டு வந்தார். ஜனரஞ்சகமான எழுத்தாளர் என்ற நிலையில் இருந்து இலக்கிய உலகிற்கும், வெகுஜன வாசகனுக்கு மான பாலமாக அவர் உருவாகி நின்றார்.

கேள்விபதில் பகுதி மூலம் அவர் வாசகர்களுக்கு தெரியப்படுத்திய விஷயங்களும் அநேகம்.
எழுதாத விஷயமே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு பல துறைகள் பற்றி எழுதிய சுஜாதா, திருக் குறளுக்கும் உரை எழுதினார். புறநானூற்றை எளிமைப்படுத்தி தருவதாக கூறினார். திரைக்கதை எழுதுவது எப்படி என்றும் கற்றுக் கொடுத்தார்.

பிரபலமாக இருந்த காலத்தில், "காயத்ரி' உள்ளிட்ட நாவல்களை படமாக்க கொடுத்து இயக்குனர்கள் அவற்றை சிதைத்து விட்டார்கள் என்று புகார் சொல்லிக் கொண்டிருந்த சுஜாதா, பிற்காலத்தில் தமிழ் திரை உலகில் ஐக்கியமான விதமும் வியப்பிற்குரியது தான். மணிரத்னம், ஷங்கர், நடிகர் கமல் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படைப்பு குழுவில் அவருக்கு நிரந்தர இடம் கிடைத்தது.

சுயசரிதையை கூட வழக்கம் போல் எழுதாமல், அவை கட்டுரைகள் போலவே அவர் "கற்றதும் பெற்றதும்' என எழுதினார்.

தனது காலத்தில் பெரும் புகழை சம்பாதித்த சுஜாதா, சர்ச்சைகளுக்கோ, விமர்சனங்களுக்கோ அப்பாற்பட்டவர் அல்ல தான்! அதையும் வெகு ஜனமாக்க முடிந்தது அவரது பலம் என்றால் அதுவே அவரது பலவீன மாகவும் இருந்தது.

கனமான விஷயங்களை ரொம்பவும்எளிமை படுத்தி விடுவார் என்பதும், இலக்கியத்தரமாக அதிகம் எழுதியது இல்லை என்றும் அவர் மீது விமர்சனங்கள் உண்டு.

குறிப்பாக, நழுவிச் செல்லும் அவரது பண்பு, கடுமையாக விமர்சிக்கப் பட்டதுண்டு.  புறநானூறு உரையில், தமிழ் இலக்கியத்தை தன் மேதாவித்தனத்தால் தப்பும் தவறுமாக எழுதி இருக்கிறார் என்றும் கூறப் பட்டது. விமர்சனங்களை கேட்டு அவர் அதிகம் கோபப்பட்டதில்லை. பெரும்பாலும் புன்னகையுடனேயே எதிர் கொண்டார்.

தமிழ் இலக்கிய உலகில் சுஜாதாவின் இடம் என்ன என்பது சுவாரசியமான கேள்வி. இலக்கிய ஆசான் என்று அவரை பலர் ஏற்க மறுக்கலாம், ஆனால் நவீன தமிழ் உரையில் புதிய வேகத்தை கொண்டு வந்ததற்காக அவர் பாராட்டப்பட வேண்டியவர்.

சங்கத் தமிழில் துவங்கி தமிழுக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. தமிழ் உரைநடையை பொறுத்தவரை அதற்கு நவீனத்துவத்தை ஏற்படுத்தி புதிய பரிமாணத்தை தந்ததற்காக தமிழ் அவரை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.
இரா. நரசிம்மன்


http://www.maalaisudar.com/staticpage.php?id=10003%20&%20section=10%20&%20catid=62%20&%20cat=?????????????

தமிழ் இலக்கிய உலகில் சுஜாதாவின் இடம் என்ன என்பது சுவாரசியமான கேள்வி

 

தமிழ் நடையில் தடம் பதித்தவர்

.
.
எழுத்தாளர் சுஜாதா அவரது எழுத்தைப் போலவே இளமைத் துடிப்புடன் வாழ்ந்து மறைந் திருக்கிறார். 70 வயதை கடந்த நிலையிலும் தனது உடலை வாட்டிய நோய்களை பொருட்படுத்தாமல், அவர் துடிப்புடனே எழுதியும் செயல்பட்டும் வந்தார்.
பெயரும் புகழும் சம்பாதித்துவிட்ட நிலையிலும் தளராத உற்சாகத்துடன், தமிழ் வாசகர்களுக்கு தான் அறிந்தவற்றை சொல்ல வேண்டும் என்ற உணர்வோடு எழுதி வந்திருக்கிறார்.
.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் தீவிரமாக இயங்கி வந்த சுஜாதாவை எந்த அடைமொழிக்குள்ளும் அடக்கி விட முடியாது.

ரங்கராஜன் என்னும் இயற்பெயர் கொண்ட அவர், தனது மனைவி "சுஜாதா' பெயரை புனைப்பெயராக எழுதத் தொடங்கிய காலத்தில் ஒரு ஜனரஞ்சகமான எழுத்தாளராகவே அறியப்பட்டார். தனக்கென தனித்துவமிக்க ஜனரஞ்சக எழுத்தாளர்.

குமுதத்தில் தொடராக வெளி வந்த முதல் நாவலான "நைலான் கயிறு' மூலம் வாசகர்கள் மத்தியில் பிரபலமான "சுஜாதா', பெல் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய படியே பத்திரிகைகளில் எழுதி குவித்த வேகம் அசாத்தியமானது.

சுஜாதா எழுதாத தமிழ் பத்திரிகைகளே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு தமிழ் எழுத்துலகில் அவரது கொடி பறந்தது.

"கணேஷ்வசந்த்' பாத்திரங்களை பிரபலமாக்கிய சுஜாதா, இன்னொரு பக்கம் ஸ்ரீரங்கம்
எஸ்.ஆர். என்னும் பெயரில் "கணையாழி' இலக்கிய பத்திரிகையில் கனமான விஷயங் களை தனக்கே உரிய இலகுவான நடையில் எழுதி வந்தார்.

அவரது இலக்கிய முகம் வெகுஜன வாசகர்களுக்கு தாமதமாகவே அறிமுகமானது. அதற்கு முன்பாகவே அறிவியல் சார்ந்த விஷயங்களை எளிமையாகவும் சுவையாகவும் சொல்லக் கூடியவராக அவர் அறியப்பட்டார்.

அவருடைய நவீன தமிழ் நடை இதற்கு உதவியாக இருந்தது. "கம்ப்யூட்டர்' என்பது ஒரு சொல்லாக கூட அறிமுகமாகாத காலத்திலேயே அவர் சிலிக்கான் பற்றியும், கம்ப்யூட்டர் பற்றியும் எழுதியது வியப்புரிக்குரியது.

அற்புதமான அறிவியல் புனை கதைகளையும் எழுதியதோடு, விஞ்ஞானத்தின் சமகால போக்கை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்த வண்ணம் இருந்தார்.
நாவல்கள் எழுதுவதில் கொஞ்சம் இடைவெளி விட்ட சுஜாதா, பின்னர் புதிய வேகத்தோடு
எழுதத் தொடங்கினார்.

இடையே மெக்சிகோ சலவைக்காரி ஜோக் தனக்கு தெரியும் என்று சொல்லி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கவும் அவரால் முடிந்தது. கனவு தொழிற்சாலை, ஸ்ரீரங்கத்து தேவதைகள், பதவிக்காக, மோதிரக் கதைகள், கொலையுதிர் காலம், வசந்தகால குற்றங்கள் என்றும் எழுத முடிந்தது.

விஞ்ஞானம் பற்றி எழுதி வந்த சுஜாதா, தனது சாதாரண நாவல்களில் கூட போகிற போக்கில் உலக விஷயங்களையும், பிரபலமான ஆளுமைகளையும் குறிப்பிட்டபடி இருப்பார்.

 இப்படி வைரக் கடத்தல் பற்றிய கதையில் ஒற்றை வரியில் "டி பியர்ஸ்' நிறுவனம் பற்றி எழுதி வருவார். கணேஷ் விடுமுறைக்காக படிக்க டால்ஸ் டாயின், வார் அண்டு பீஸ் நாவலை எடுத்து வைத்துக் கொண்டான் என்று எழுதுவார்.

இப்படி நல்ல வாசகர்களுக்கு தனது நாவலில் அவர் ஆங்காங்கே பொறி வைத்திருப்பார். அதை பிடித்துக் கொண்டால் வாசகர்கள் தீவிரமான விஷயங்களை தெரிந்து கொள்ளும் பயணத்தை மேற்கொள்ள தொடங்கலாம்.

பின்னர் கணையாழியில் எழுதியது போலவே, பிரபலமான பத்திரிகை களிலும், இலக்கிய விஷயங்களை எழுதத் தொடங்கினார். ஞானக் கூத்தனின் கவிதைகளையும், சுந்தர ராமசாமியின் புளிய மரத்தின் கதையையும், நகுலனின் நினைவுப் பாதையையும், தி.ஜானகிராமனின் கட்டிப்போடும் தமிழ் நடை பற்றியும் அவர் சராசரி வாசகர்களுக்கு அறிமுகம் செய்தார்.

இசங்களின் பெயரில், தமிழில் இலக்கிய உலகில் பலர் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த போது, சுஜாதா ஆரவாரமே இல்லாமல் உலக இலக்கியம் பற்றி எழுதிக் கொண்டிருந்தார்.
அவர் சுட்டிக்காட்டி பிரபலமான இளம் கவிஞர்களும் உண்டு. மனுஷ்ய புத்ரன், மகுடேஸ்வரன் போன்றோர் இதற்கு உதாரணம். அவர் கை காட்டிய புத்தகங்களின் பின்னே ஆயிரக்கணக்கான வாசகர்கள் படையெடுக்க தயாராக இருந்த நிலையிலும் சுஜாதா "விமர்சனம்' என்ற மகுடம் தரித்துக் கொள்ள விரும்பியதில்லை.

நல்ல விஷயங்களுடனான எனது பரிச்சயத்தை பகிர்ந்து கொள்வதே எனது பணி என அவர் செயல்பட்டு வந்தார். ஜனரஞ்சகமான எழுத்தாளர் என்ற நிலையில் இருந்து இலக்கிய உலகிற்கும், வெகுஜன வாசகனுக்கு மான பாலமாக அவர் உருவாகி நின்றார்.

கேள்விபதில் பகுதி மூலம் அவர் வாசகர்களுக்கு தெரியப்படுத்திய விஷயங்களும் அநேகம்.
எழுதாத விஷயமே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு பல துறைகள் பற்றி எழுதிய சுஜாதா, திருக் குறளுக்கும் உரை எழுதினார். புறநானூற்றை எளிமைப்படுத்தி தருவதாக கூறினார். திரைக்கதை எழுதுவது எப்படி என்றும் கற்றுக் கொடுத்தார்.

பிரபலமாக இருந்த காலத்தில், "காயத்ரி' உள்ளிட்ட நாவல்களை படமாக்க கொடுத்து இயக்குனர்கள் அவற்றை சிதைத்து விட்டார்கள் என்று புகார் சொல்லிக் கொண்டிருந்த சுஜாதா, பிற்காலத்தில் தமிழ் திரை உலகில் ஐக்கியமான விதமும் வியப்பிற்குரியது தான். மணிரத்னம், ஷங்கர், நடிகர் கமல் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படைப்பு குழுவில் அவருக்கு நிரந்தர இடம் கிடைத்தது.

சுயசரிதையை கூட வழக்கம் போல் எழுதாமல், அவை கட்டுரைகள் போலவே அவர் "கற்றதும் பெற்றதும்' என எழுதினார்.

தனது காலத்தில் பெரும் புகழை சம்பாதித்த சுஜாதா, சர்ச்சைகளுக்கோ, விமர்சனங்களுக்கோ அப்பாற்பட்டவர் அல்ல தான்! அதையும் வெகு ஜனமாக்க முடிந்தது அவரது பலம் என்றால் அதுவே அவரது பலவீன மாகவும் இருந்தது.

கனமான விஷயங்களை ரொம்பவும்எளிமை படுத்தி விடுவார் என்பதும், இலக்கியத்தரமாக அதிகம் எழுதியது இல்லை என்றும் அவர் மீது விமர்சனங்கள் உண்டு.

குறிப்பாக, நழுவிச் செல்லும் அவரது பண்பு, கடுமையாக விமர்சிக்கப் பட்டதுண்டு.  புறநானூறு உரையில், தமிழ் இலக்கியத்தை தன் மேதாவித்தனத்தால் தப்பும் தவறுமாக எழுதி இருக்கிறார் என்றும் கூறப் பட்டது. விமர்சனங்களை கேட்டு அவர் அதிகம் கோபப்பட்டதில்லை. பெரும்பாலும் புன்னகையுடனேயே எதிர் கொண்டார்.

தமிழ் இலக்கிய உலகில் சுஜாதாவின் இடம் என்ன என்பது சுவாரசியமான கேள்வி. இலக்கிய ஆசான் என்று அவரை பலர் ஏற்க மறுக்கலாம், ஆனால் நவீன தமிழ் உரையில் புதிய வேகத்தை கொண்டு வந்ததற்காக அவர் பாராட்டப்பட வேண்டியவர்.

சங்கத் தமிழில் துவங்கி தமிழுக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. தமிழ் உரைநடையை பொறுத்தவரை அதற்கு நவீனத்துவத்தை ஏற்படுத்தி புதிய பரிமாணத்தை தந்ததற்காக தமிழ் அவரை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.
இரா. நரசிம்மன்


http://www.maalaisudar.com/staticpage.php?id=10003%20&%20section=10%20&%20catid=62%20&%20cat=?????????????

தமிழ் இலக்கிய உலகில் சுஜாதாவின் இடம் என்ன என்பது சுவாரசியமான கேள்வி

 

தமிழ் நடையில் தடம் பதித்தவர்

.
.
எழுத்தாளர் சுஜாதா அவரது எழுத்தைப் போலவே இளமைத் துடிப்புடன் வாழ்ந்து மறைந் திருக்கிறார். 70 வயதை கடந்த நிலையிலும் தனது உடலை வாட்டிய நோய்களை பொருட்படுத்தாமல், அவர் துடிப்புடனே எழுதியும் செயல்பட்டும் வந்தார்.
பெயரும் புகழும் சம்பாதித்துவிட்ட நிலையிலும் தளராத உற்சாகத்துடன், தமிழ் வாசகர்களுக்கு தான் அறிந்தவற்றை சொல்ல வேண்டும் என்ற உணர்வோடு எழுதி வந்திருக்கிறார்.
.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் தீவிரமாக இயங்கி வந்த சுஜாதாவை எந்த அடைமொழிக்குள்ளும் அடக்கி விட முடியாது.

ரங்கராஜன் என்னும் இயற்பெயர் கொண்ட அவர், தனது மனைவி "சுஜாதா' பெயரை புனைப்பெயராக எழுதத் தொடங்கிய காலத்தில் ஒரு ஜனரஞ்சகமான எழுத்தாளராகவே அறியப்பட்டார். தனக்கென தனித்துவமிக்க ஜனரஞ்சக எழுத்தாளர்.

குமுதத்தில் தொடராக வெளி வந்த முதல் நாவலான "நைலான் கயிறு' மூலம் வாசகர்கள் மத்தியில் பிரபலமான "சுஜாதா', பெல் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய படியே பத்திரிகைகளில் எழுதி குவித்த வேகம் அசாத்தியமானது.

சுஜாதா எழுதாத தமிழ் பத்திரிகைகளே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு தமிழ் எழுத்துலகில் அவரது கொடி பறந்தது.

"கணேஷ்வசந்த்' பாத்திரங்களை பிரபலமாக்கிய சுஜாதா, இன்னொரு பக்கம் ஸ்ரீரங்கம்
எஸ்.ஆர். என்னும் பெயரில் "கணையாழி' இலக்கிய பத்திரிகையில் கனமான விஷயங் களை தனக்கே உரிய இலகுவான நடையில் எழுதி வந்தார்.

அவரது இலக்கிய முகம் வெகுஜன வாசகர்களுக்கு தாமதமாகவே அறிமுகமானது. அதற்கு முன்பாகவே அறிவியல் சார்ந்த விஷயங்களை எளிமையாகவும் சுவையாகவும் சொல்லக் கூடியவராக அவர் அறியப்பட்டார்.

அவருடைய நவீன தமிழ் நடை இதற்கு உதவியாக இருந்தது. "கம்ப்யூட்டர்' என்பது ஒரு சொல்லாக கூட அறிமுகமாகாத காலத்திலேயே அவர் சிலிக்கான் பற்றியும், கம்ப்யூட்டர் பற்றியும் எழுதியது வியப்புரிக்குரியது.

அற்புதமான அறிவியல் புனை கதைகளையும் எழுதியதோடு, விஞ்ஞானத்தின் சமகால போக்கை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்த வண்ணம் இருந்தார்.
நாவல்கள் எழுதுவதில் கொஞ்சம் இடைவெளி விட்ட சுஜாதா, பின்னர் புதிய வேகத்தோடு
எழுதத் தொடங்கினார்.

இடையே மெக்சிகோ சலவைக்காரி ஜோக் தனக்கு தெரியும் என்று சொல்லி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கவும் அவரால் முடிந்தது. கனவு தொழிற்சாலை, ஸ்ரீரங்கத்து தேவதைகள், பதவிக்காக, மோதிரக் கதைகள், கொலையுதிர் காலம், வசந்தகால குற்றங்கள் என்றும் எழுத முடிந்தது.

விஞ்ஞானம் பற்றி எழுதி வந்த சுஜாதா, தனது சாதாரண நாவல்களில் கூட போகிற போக்கில் உலக விஷயங்களையும், பிரபலமான ஆளுமைகளையும் குறிப்பிட்டபடி இருப்பார்.

 இப்படி வைரக் கடத்தல் பற்றிய கதையில் ஒற்றை வரியில் "டி பியர்ஸ்' நிறுவனம் பற்றி எழுதி வருவார். கணேஷ் விடுமுறைக்காக படிக்க டால்ஸ் டாயின், வார் அண்டு பீஸ் நாவலை எடுத்து வைத்துக் கொண்டான் என்று எழுதுவார்.

இப்படி நல்ல வாசகர்களுக்கு தனது நாவலில் அவர் ஆங்காங்கே பொறி வைத்திருப்பார். அதை பிடித்துக் கொண்டால் வாசகர்கள் தீவிரமான விஷயங்களை தெரிந்து கொள்ளும் பயணத்தை மேற்கொள்ள தொடங்கலாம்.

பின்னர் கணையாழியில் எழுதியது போலவே, பிரபலமான பத்திரிகை களிலும், இலக்கிய விஷயங்களை எழுதத் தொடங்கினார். ஞானக் கூத்தனின் கவிதைகளையும், சுந்தர ராமசாமியின் புளிய மரத்தின் கதையையும், நகுலனின் நினைவுப் பாதையையும், தி.ஜானகிராமனின் கட்டிப்போடும் தமிழ் நடை பற்றியும் அவர் சராசரி வாசகர்களுக்கு அறிமுகம் செய்தார்.

இசங்களின் பெயரில், தமிழில் இலக்கிய உலகில் பலர் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த போது, சுஜாதா ஆரவாரமே இல்லாமல் உலக இலக்கியம் பற்றி எழுதிக் கொண்டிருந்தார்.
அவர் சுட்டிக்காட்டி பிரபலமான இளம் கவிஞர்களும் உண்டு. மனுஷ்ய புத்ரன், மகுடேஸ்வரன் போன்றோர் இதற்கு உதாரணம். அவர் கை காட்டிய புத்தகங்களின் பின்னே ஆயிரக்கணக்கான வாசகர்கள் படையெடுக்க தயாராக இருந்த நிலையிலும் சுஜாதா "விமர்சனம்' என்ற மகுடம் தரித்துக் கொள்ள விரும்பியதில்லை.

நல்ல விஷயங்களுடனான எனது பரிச்சயத்தை பகிர்ந்து கொள்வதே எனது பணி என அவர் செயல்பட்டு வந்தார். ஜனரஞ்சகமான எழுத்தாளர் என்ற நிலையில் இருந்து இலக்கிய உலகிற்கும், வெகுஜன வாசகனுக்கு மான பாலமாக அவர் உருவாகி நின்றார்.

கேள்விபதில் பகுதி மூலம் அவர் வாசகர்களுக்கு தெரியப்படுத்திய விஷயங்களும் அநேகம்.
எழுதாத விஷயமே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு பல துறைகள் பற்றி எழுதிய சுஜாதா, திருக் குறளுக்கும் உரை எழுதினார். புறநானூற்றை எளிமைப்படுத்தி தருவதாக கூறினார். திரைக்கதை எழுதுவது எப்படி என்றும் கற்றுக் கொடுத்தார்.

பிரபலமாக இருந்த காலத்தில், "காயத்ரி' உள்ளிட்ட நாவல்களை படமாக்க கொடுத்து இயக்குனர்கள் அவற்றை சிதைத்து விட்டார்கள் என்று புகார் சொல்லிக் கொண்டிருந்த சுஜாதா, பிற்காலத்தில் தமிழ் திரை உலகில் ஐக்கியமான விதமும் வியப்பிற்குரியது தான். மணிரத்னம், ஷங்கர், நடிகர் கமல் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படைப்பு குழுவில் அவருக்கு நிரந்தர இடம் கிடைத்தது.

சுயசரிதையை கூட வழக்கம் போல் எழுதாமல், அவை கட்டுரைகள் போலவே அவர் "கற்றதும் பெற்றதும்' என எழுதினார்.

தனது காலத்தில் பெரும் புகழை சம்பாதித்த சுஜாதா, சர்ச்சைகளுக்கோ, விமர்சனங்களுக்கோ அப்பாற்பட்டவர் அல்ல தான்! அதையும் வெகு ஜனமாக்க முடிந்தது அவரது பலம் என்றால் அதுவே அவரது பலவீன மாகவும் இருந்தது.

கனமான விஷயங்களை ரொம்பவும்எளிமை படுத்தி விடுவார் என்பதும், இலக்கியத்தரமாக அதிகம் எழுதியது இல்லை என்றும் அவர் மீது விமர்சனங்கள் உண்டு.

குறிப்பாக, நழுவிச் செல்லும் அவரது பண்பு, கடுமையாக விமர்சிக்கப் பட்டதுண்டு.  புறநானூறு உரையில், தமிழ் இலக்கியத்தை தன் மேதாவித்தனத்தால் தப்பும் தவறுமாக எழுதி இருக்கிறார் என்றும் கூறப் பட்டது. விமர்சனங்களை கேட்டு அவர் அதிகம் கோபப்பட்டதில்லை. பெரும்பாலும் புன்னகையுடனேயே எதிர் கொண்டார்.

தமிழ் இலக்கிய உலகில் சுஜாதாவின் இடம் என்ன என்பது சுவாரசியமான கேள்வி. இலக்கிய ஆசான் என்று அவரை பலர் ஏற்க மறுக்கலாம், ஆனால் நவீன தமிழ் உரையில் புதிய வேகத்தை கொண்டு வந்ததற்காக அவர் பாராட்டப்பட வேண்டியவர்.

சங்கத் தமிழில் துவங்கி தமிழுக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. தமிழ் உரைநடையை பொறுத்தவரை அதற்கு நவீனத்துவத்தை ஏற்படுத்தி புதிய பரிமாணத்தை தந்ததற்காக தமிழ் அவரை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.
இரா. நரசிம்மன்


http://www.maalaisudar.com/staticpage.php?id=10003%20&%20section=10%20&%20catid=62%20&%20cat=?????????????

அபுமுஹை ஆஜர்,ஆஜர்,ஆஜர்-மருத்துவர் ஜாகிர் நாயக் ஆஜர் ,ஆஜர், ஆஜர்

இந்த சவால்/கேள்வி Dr. நாயக் மற்றும் அபூ முஹை அவர்களுக்கும் தான்

மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு நேர்க்காணலில் "இஸ்லாமை விட்டு வெளியேறி, வேறு மதத்தை பரப்புகிறவனை, இஸ்லாம் சட்டப்படி கொல்லவேண்டும்" என்று அவர் சொன்ன கருத்து சரியானதா என்று கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.


Click: Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி:யார் தேசத் துரோகி?


இதற்கு அபூ முஹை அவர்கள், ஜாகிர் நாயக் அவர்கள் சொல்வது சரியானது தான் இஸ்லாமில் இப்படித்தான் சட்டம் என்று ஒரு கட்டுரையை எழுதினார்.


Click: மதம் மாறினால் மரண தண்டனை-1


இதற்கு நான் மறுபடியும் ஒரு மறு உத்தரவு எழுதினேன்.


Click Here: அபூ முஹை அவர்களுக்கு உமர் பதில்: * Conditions Apply (* நிபந்தனைகளுக்கு உட்பட்டது)


இந்த என் கட்டுரைக்கு ஒரு இஸ்லாமிய சகோதரர் எனக்கு இரண்டு கேள்விகளை கேட்டு பின்னூட்டம் இட்டுள்ளார், அதற்கு பதில் அளிக்கும் வண்ணமாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.


என் கட்டுரைக்கு வந்த பின்னூட்டம்


Quote:
Dear Umar,


Good Morning!

Do you know in Quran - Chapter al-bakara 2:256 saying that, there is 'NO' compulsion in Islam that everyone must adopt Islam as our religion. Yes. It is your right to accept about if you will! Please let me know where in Quran or Hadith stating if a muslim left from Islam, he/she must kill? I waiting for your reply. My ID : aljabbar@gmail.com

Source: http://unmaiadiyann.blogspot.com/2008/05/conditions-apply.html


ஈஸா குர்‍ஆன் பதில்

அன்புள்ள அல்ஜப்பார் அவர்களே, உங்கள் பின்னூட்டத்திற்காக நன்றி.


உங்கள் பின்னூட்டத்தில் இரண்டு விவரங்களை கொடுத்தீர்கள். அதாவது,


Quote:
1) குர்-ஆன் 2:256ம் வசனம் "இஸ்லாமில் கட்டாயமில்லை" என்றுச் சொல்கிறது, இது எனக்கு தெரியுமா? என்று கேட்டீர்கள்.


2) இரண்டாவதாக, குர்-ஆனிலோ, ஹதீஸ்களிலோ "இஸ்லாமை விட்டு வேறு மதத்திற்கு மாறுபவர்களைக் கொல்லூங்கள்" என்ற வசனம் எங்கே உள்ளது எனக்கு தெரிவியுங்கள் என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்.



உங்களின் இந்த இரண்டு விவரங்கள் பற்றிய என் விளக்கத்தை இங்கு தருகிறேன்.


1) குர்-ஆன் 2:256ம் வசனம் (இஸ்லாமில் கட்டாயமில்லை), இரத்து செய்யப்பட்ட(து)தா?


இந்த வசனம்(2:256) குர்-ஆனில் இருப்பது எனக்குத் தெரியும், அதே நேரத்தில், இந்த வசனம் இரத்துசெய்யப்பட்டது என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள்.


எப்போதெல்லாம், இஸ்லாமியர்கள் "இஸ்லாம் ஒரு அமைதி மதம் என்று" காட்ட விரும்புவீர்களோ அப்போது நீங்கள் மேற்கோள் காட்டும் வசனம் இதுவாகத்தான் பெரும்பான்மையாக இருக்கும்.


இவ்வசனம் இரத்துசெய்யப்பட்டதா? இதோ சில விவரங்கள்:


1) பொதுவாக இரத்துசெய்வது பற்றிய குர்‍ஆன் வசனம்:

Quote:
குர்-ஆன் 2:106
ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?



அல்லா தன் வசனத்தை சில நேரங்களில் மாற்றுவார், அதற்கு பதிலாக வேறு வசனத்தை இறக்குவார் என்றுச் சொல்கிறார்.[1]


2) குர்-ஆன் வசனங்கள் 9:73, 9:123, 48:16 போன்றவைகள், குர்-ஆன் 2:256ஐ இரத்து செய்கின்றன:


சில இஸ்லாமிய அறிஞர்கள், கீழ்கண்ட வசனங்கள், 2:256ம் வசனத்தை இரத்து செய்துவிட்டது என்றுச் சொல்கிறார்கள்.


Quote:
(9:73) நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக (மறுமையில்) .............

(9:123) நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் .............

(48:16) பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகளிடம்; "நீங்கள் சீக்கரத்தில் மிக்க பலசாலிகளான ஒரு சமூகத்தாரிடம் (அவர்களை எதிர்த்துப் போரிட) அழைக்கப்படுவீர்கள், அவர்களுடன் நீங்கள் போரிட வேண்டும்; அல்லது அவர்கள் முற்றிலும் பணிய வேண்டும், ...........
[2]

Source: http://www.answering-islam.org/Hahn/mappe.html



3) குர்-ஆனில் உள்ள மன்னிப்பு சம்மந்தப்பட்ட எல்லா வசனங்களையும், குர்-ஆன் 9:5 இரத்து செய்துவிடுகிறது.[3]


Quote:
Suyuti in his book استنباط التنزيل (Istenbat al tanzeel) says: "Every thing in the Qur'an about forgiveness is abrogated by verse 9:5."

Al-Shawkani in his book السيل الجرار (Alsaylu Jarar 4:518-519) says: "Islam is unanimous about fighting the unbelievers and forcing them to Islam or submitting and paying Jiziah (special tax paid only by Christians or Jews) or being killed. [The verses] about forgiving them are abrogated unanimously by the obligation of fighting in any case."

Source: http://www.answering-islam.org/Terrorism/peace-loving.html



4) islamqa.com அளித்த பதில்(பத்வா): குர்-ஆன் 2:256ம் வசனம் இரத்து செய்யப்பட்டது:

ஆயிரக்கணக்கான இஸ்லாமிய கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கும் தளமாகிய "Islam QA" என்றத் தளம், இவ்வசனம் இரத்து செய்யப்பட்டுவிட்டது என்று "பத்வா (Fatwa No: 34770)" கொடுத்துள்ளது.

அந்த பதிலை இங்கு படிக்கவும்: http://islamqa.com/en/ref/34770


Quote:
கேள்வி:


There is no compulsion to accept Islam

Some friends say that whoever does not enter Islam, that is his choice and he should not be forced to become Muslim, quoting as evidence the verses in which Allaah says (interpretation of the meaning):
"And had your Lord willed, those on earth would have believed, all of them together. So, will you (O Muhammad) then compel mankind, until they become believers"
[Yoonus 10:99]
"There is no compulsion in religion"
[al-Baqarah 2:256]
What is your opinion concerning that?.


பதில்:

Praise be to Allaah.

The scholars explained that these two verses, and other similar verses, have to do with those from whom the jizyah may be taken, such as Jews, Christians and Magians (Zoroastrians). They are not to be forced, rather they are to be given the choice between becoming Muslim or paying the jizyah.

Other scholars said that this applied in the beginning, but was subsequently abrogated by Allaah's command to fight and wage jihad. So whoever refuses to enter Islam should be fought when the Muslims are able to fight, until they either enter Islam or pay the jizyah if they are among the people who may pay jizyah. The kuffaar should be compelled to enter Islam if they are not people from whom the jizyah may be taken, because that will lead to their happiness and salvation in this world and in the Hereafter. Obliging a person to adhere to the truth in which is guidance and happiness is better for him than falsehood. Just as a person may be forced to do the duty that he owes to other people even if that is by means of imprisonment or beating, so forcing the kaafirs to believe in Allaah alone and enter into the religion of Islam is more important and more essential, because this will lead to their happiness in this world and in the Hereafter. This applies unless they are People of the Book, i.e., Jews and Christians, or Magians, because Islam says that these three groups may be given the choice: they may enter Islam or they may pay the jizyah and feel themselves subdued.

Some of the scholars are of the view that others may also be given the choice between Islam and jizyah, but the most correct view is that no others should be given this choice, rather these three groups are the only ones who may be given the choice, because the Prophet (peace and blessings of Allaah be upon him) fought the kuffaar in the Arabian Peninsula and he only accepted their becoming Muslim. And Allaah says (interpretation of the meaning):

"But if they repent [by rejecting Shirk (polytheism) and accept Islamic Monotheism] and perform As-Salaah (Iqaamat-as-Salaah), and give Zakaah, then leave their way free. Verily, Allaah is Oft-Forgiving, Most Merciful"

[al-Tawbah 9:5]

He did not say, "if they pay the jizyah". The Jews, Christians and Magians are to be asked to enter Islam; if they refuse then they should be asked to pay the jizyah. If they refuse to pay the jizyah then the Muslims must fight them if they are able to do so. Allaah says (interpretation of the meaning):

"Fight against those who (1) believe not in Allaah, (2) nor in the Last Day, (3) nor forbid that which has been forbidden by Allaah and His Messenger (Muhammad), (4) and those who acknowledge not the religion of truth (i.e. Islam) among the people of the Scripture (Jews and Christians), until they pay the Jizyah with willing submission, and feel themselves subdued"

[al-Tawbah 9:29]

And it was proven that the Prophet (peace and blessings of Allaah be upon him) accepted the jizyah from the Magians, but it was not proven that the Prophet (peace and blessings of Allaah be upon him) or his companions (may Allaah be pleased with them) accepted the jizyah from anyone except the three groups mentioned above.

The basic principle concerning that is the words of Allaah (interpretation of the meaning):

"And fight them until there is no more Fitnah (disbelief and polytheism, i.e. worshipping others besides Allaah), and the religion (worship) will all be for Allaah Alone [in the whole of the world]"

[al-Anfaal 8:39]

"Then when the Sacred Months (the 1st, 7th, 11th, and 12th months of the Islamic calendar) have passed, then kill the Mushrikoon (see V.2:105) wherever you find them, and capture them and besiege them, and lie in wait for them in each and every ambush. But if they repent [by rejecting Shirk (polytheism) and accept Islamic Monotheism] and perform As-Salaah (Iqaamat-as-Salaah), and give Zakaah, then leave their way free. Verily, Allaah is Oft-Forgiving, Most Merciful"

[al-Tawbah 9:5]

This verse is known as Ayat al-Sayf (the verse of the sword).

These and similar verses abrogate the verses which say that there is no compulsion to become Muslim.

And Allaah is the Source of strength.

Source: http://islamqa.com/en/ref/34770




இஸ்லாமியர்கள் "இஸ்லாமில் கட்டாயமில்லை" என்பதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க பயன்படுத்தும் குர்‍ஆன் 2:256ம் வசனம் இரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக வேறு வசனங்கள் இறக்கப்பட்டதென்று, பல இஸ்லாமிய அறிஞர்கள் சொன்ன கருத்தை நான் இங்கு முன்வைத்தேன். இது என் கருத்தல்ல.


இனி "குர்‍ஆன் 2:256ம்" வசனம் குர்‍ஆனில் இருந்தாலும் அதை பின்பற்றவேண்டிய அவசியம் முஸ்லீம்களுக்கு இல்லை என்ற தோரணையில் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள். எனவே, அருமை நண்பர் "அல் ஜப்பார்" அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும், அதாவது அவர் எனக்கு சொன்ன இந்த வசனம் இரத்து செய்யப்பட்டதா இல்லையா ? என்பதை அவர் தான் முடிவு செய்யவேண்டும்.


அல் ஜப்பார் அவர்களே, குர்‍ஆன் 2:256ம் வசனம் இரத்து செய்யப்பட்டது என்று சொல்லும் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் தவறு செய்கிறார்கள் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? அப்படி எண்ணினால், இஸ்லாமுக்கு இதனால் உண்டான இழுக்கை நீக்க வேண்டிய கடமை உங்களுடையது என்னுடையது அல்ல? இந்த அறிஞர்களுக்கு நீங்கள் பதில் சொல்வீர்களோ இல்லையோ? அல்லது இவ்வசனம் இரத்து செய்யப்படவில்லை என்று ஆதாரத்தோடு விவரங்களைச் சொல்லி, உங்கள் இஸ்லாமிய அறிஞர்களை திருந்திவிடும்படி சொல்வீர்களோ இல்லையோ? அது உங்கள் விருப்பம்.


உண்மையிலேயே "இஸ்லாமில் கட்டாயமில்லை" என்பதை நீங்கள் நம்புகிறவராக இருப்பீர்களானால், குறைந்தபட்சம் நான் மேலே குறிப்பிட்ட இஸ்லாம் கேள்விபதில் என்ற தளத்திற்கு மெயில் அனுப்பி, அவர்கள் தவறை உணரச்செய்யுங்கள். அப்படி இல்லை அவர்கள் சொல்வது தான் சரியானது என்றுச் சொல்வீர்களானால், எனக்கு இந்த வசனம் பற்றி நீங்கள் எழுதியது ஒரு ஏமாற்று வேலை என்பது மட்டும் நிச்சயம். குர்‍ஆனில் இப்படிப்பட்ட வசனம்(2:256) இருப்பது பற்றி எனக்கு தெரிவிப்பதை விட, உங்கள் இஸ்லாமியர்களுக்கு, அறிஞர்களுக்கு தெரிவிப்பது தான் உங்களின் முக்கியமான கடமையாக இப்போது உள்ளது என்பது என் கருத்து.


அடுத்து உங்களுடைய அடுத்த கேள்விக்கு என் கருத்தைச் சொல்கிறேன்.




2) இரண்டாவதாக, குர்-ஆனிலோ, ஹதீஸ்களிலோ "இஸ்லாமை விட்டு வேறு மதத்திற்கு மாறுபவர்களைக் கொல்லூங்கள்" என்ற வசனம் எங்கே உள்ளது எனக்கு தெரிவியுங்கள் என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்.


அருமை நண்பர் அல் ஜப்பார் அவர்களே, இந்த கேள்வியை நீங்கள் கேட்கவேண்டிய ஆள் நான் அல்ல.

இந்த கேள்வியை என்னிடம் அல்ல, இதை நீங்கள் மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்கவேண்டும், மற்றும் இதை நீங்கள், நண்பர் "அபூ முஹை" அவர்களிடம் கேட்கவேண்டும்.


ஏன் நான் இப்படி சொல்கிறேன் என்று ஆச்சரியப்படவேண்டாம். ஏனென்றால், இஸ்லாமை விட்டு வெளியேறினால் மரண தண்டனை உண்டு என்று நான் வாதட வரவில்லை. இதைச் சொன்னவர், நம் அருமை இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக் அவர்கள்.


இப்படி தண்டனை கொடுப்பது சரியானது தான், ஒருவர் "இஸ்லாமில் இணையும் போது" அவர் தன் உயிரை இஸ்லாம் எடுக்கவும் இஸ்லாமிய சட்டத்திற்கு அதிகாரம் கொடுத்துத் தான் சேறுகிறார் என்றுச் சொன்னவரும் நான் அல்ல. இதைச் சொன்னவர், சகோதரர் அபூ முஹை அவர்கள் தான்.


இந்த சவாலை இவர்கள் இருவருக்கும் இன்னும் இப்படி இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை இஸ்லாம் கொல்லச்சொல்கிறது என்றுச் சொல்லும் மற்ற இஸ்லாமிய அறிஞர்களுக்கும் நீங்கள் வைக்கவேண்டுமே ஒழிய என்னிடம் அல்ல.


அதாவது, உங்கள் வரிகளைக் கண்டால், இஸ்லாம் இப்படி எங்கும் சொல்லவில்லை என்றுச் சொல்கிறீர்கள், அதிலும் குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் இப்படி சொல்லப்படவில்லை என்றுச் சொல்கிறீர்கள். நீங்கள் உண்மையாக இப்படி நம்புவீர்களானால், இந்த கேள்வியை அப்படியே திருப்பி, உங்கள் இஸ்லாமிய அறிஞர்களாகிய ஜாகிர் நாயக்கிற்கும், அபூ முஹை அவர்களுக்கும் கேட்டுப்பாருங்கள்.


உண்மையைச் சொல்லப்போனால், உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒன்று தான். அதாவது, அல்லா இப்படி சொல்லவில்லை என்று மிகவும் நம்பிக்கையாக நீங்கள் நம்புகிறீர்கள். அதே போலத்தான் நானும் நம்புகிறேன், ஒரு உண்மையான இறைவன் இப்படி கட்டளை கொடுக்கமாட்டார் என்று நானும் நம்புகிறேன். உங்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால், நீங்கள் இஸ்லாமுக்குள் இருந்து இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள், நான் இஸ்லாமுக்கு வெளியே இருந்து கேட்கிறேன், அவ்வளவு தான்.


ஜாகிர் நாயக் அவர்கள் சொன்ன கருத்து எப்படி நியாயமாகும் என்றுத் தான் நான் கேட்டேன், அதே போல, அபூ முஹை அவர்களும் நாயக் அவர்கள் சொல்வதை அங்கீகரித்ததால், நானும் இது எப்படி நியாயம் என்று கேட்டேன். எனவே, என்னிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இது அல்ல. எனக்கு முன் வைக்க வேண்டிய சவால் இது அல்ல. இதை நீங்கள் "இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை" கொல்லவேண்டும் என்றுச் சொல்கின்ற எல்லாருக்கும் முன்பாக வைக்கவேண்டிய கேள்வி இது.


முடிவுரை: உண்மையிலேயே நீங்கள் சொன்னதை நம்புகிறவராக நீங்கள் இருப்பீரானால், உடனே, அபூ முஹை அவர்களுக்கு இந்த கேள்வியை வையுங்கள். சரி, உங்கள் வேலை சுலபம் ஆகவேண்டும் என்பதற்காக நானே அதை அபூ முஹை அவர்களுக்கு வைக்கிறேன்.

அருமை அபூ முஹை அவர்களே, குர்‍ஆனிலோ, ஹதீஸ்களிலோ இப்படி வசனம் வரவில்லை என்று அல் ஜப்பார் கேட்கிறார், அதாவது சவால் விடுகிறார். உங்களால் முடிந்தால் அவருக்கு பதில் அளியுங்கள். இந்த சவால் ஜாகிர் நாயக் அவர்களின் வார்த்தைகளை அங்கீகரிக்கும் நண்பர்களுக்கும் பொருந்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


கடைசியாக, அல் ஜப்பார் அவர்களே, உங்கள் முதலாவது விவரமாகிய குர்‍ஆன் 2:256ம் வசனம் இரத்துசெய்யப்பட்டு விட்டது என்று இஸ்லாமியர்கள் சொல்லும் விவரங்களுக்கு உங்கள் பதில் என்ன? இந்த வசனம் குர்‍ஆனில் இருப்பது எனக்கு தெரியும், ஆனால், இப்படி இது இரத்துசெய்யப்பட்டு விட்டது என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வது உங்களுக்குத் தெரியுமா? இது சரியா தவறா என்பதை நீங்கள் தான் ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும்.


அடுத்ததாக, நீங்கள் முன்வைத்த சவாலை எனக்கு வைக்காமல், ஜாகிர் நாயக் அவர்களுக்கும், அபூ முஹை அவர்களுக்கும் கேளுங்கள், அவர்கள் தான் இப்படிச் சொன்னார்கள், நான் அதை எதிர்த்தேன் அவ்வளவு தான் (நீங்கள் இப்போது எதிர்ப்பது போல).



-------------------------------------------------

பின் குறிப்புக்கள்:

[1] இந்த வசனத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்கள் எதிர்மறையான பொருள் வரும்படி மொழிபெயர்த்துள்ளார்கள்.

A.Yusuf Ali
None of Our revelations do We abrogate or cause to be forgotten, but We substitute something better or similar: Knowest thou not that Allah Hath power over all things?

Marmaduke Pickthall
Nothing of our revelation (even a single verse) do we abrogate or cause be forgotten, but we bring (in place) one better or the like thereof. Knowest thou not that Allah is Able to do all things ?

Dr Hilali & Dr. Mohsin Khan
Whatever a Verse (revelation) do We abrogate or cause to be forgotten, We bring a better one or similar to it. Know you not that Allâh is able to do all things?

M.H. Shakir
Whatever communications We abrogate or cause to be forgotten, We bring one better than it or like it. Do you not know that Allah has power over all things?

[2] Some Quranic exegetes state that Qur'an 2:256 has been abrogated by the following verses:

Quote:
O Prophet! Strive against the disbelievers and the hypocrites! Be harsh with them.... (9:73)

O ye who believe! Fight those of the disbelievers who are near to you, and let them find harshness in you.... (9:123)

Say unto those of the wondering Arabs who were left behind: Ye will be called against a folk of mighty prowess to fight them until they surrender.... (48:16)[7]

http://www.answering-islam.org/Hahn/mappe.html


[3] குர்‍ஆன் 9:5 (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

source: http://isakoran.blogspot.com/2008/05/dr.html

அரசுத் தொலைகாட்சியில் அரை நிர்வாண ஆபாச சினிமா!!!!!!

இன்றைக்கு தொலைக்காட்சிகளும் சினிமாவும் ஆபாசங்களை கட்டவிழ்த்து விட்டு மக்களை சீரழித்து வருவது ஒருபுறம் இருக்க வேலியே பயிரை மேய்ந்த கதையாக மத்திய அரசின் லோச்சபா டிவி ஆபாச படங்களை போடுவது மிகவும் வேதனையான விசயங்களாகும்.

லோக்சபா சானலில் ஆபாச காட்சிகள் - மக்கள் முகம் சுளிப்பு
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgets
மதுரை: மத்திய அரசின், லோச்சபா டிவி சேனலில் பாலியல் காட்சிகள் தாராளமாக காட்டப்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோக்சபா நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப வசதியாக மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை ஆரம்பித்த சேனல்தான் லோக்சபா சானல். இதில் லோக்சபா நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதுதவிர விவாதங்கள், பேட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின்றன.

தற்போது இந்த சேனலில் திரைப்படங்களும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. பாடல் காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன.

சில தினங்களுக்கு முன்பு இரவில் அந்த சேனலில் ஒளிபரப்பான ஒரு படத்தில் பாலுணர்வைத் தூண்டும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதை எடிட் செய்யாமல் அப்படியே ஒளிபரப்பினர்.

அரை நிர்வாண கோலத்தில் ஒரு ஆணும், பெண்ணும் படுக்கையில் இருப்பது போன்ற அந்தக் காட்சி குடும்பத்துடன் டிவி பார்ப்பவர்களை நெளிய வைத்தது.

தனியார் சேனல்கல்கள் தான் நேயர்களை கவரவும், விளம்பர படங்கள் மக்களை சென்றடையவும் பாலுணர்வு தூண்டும் வகையில் காட்சிகள் அமைப்பது வழக்கம்.

ஆனால் பாரம்பரியம் மிக்க லோக் சபா பெயரில் ஒளிபரப்படும் சேனலிலும் இந்த நிலை தானா என்று பொது மக்கள் ஆதங்கப்படுகின்றனர்


http://thatstamil.oneindia.in/news/2008/05/18/tn-obscene-scenes-in-loksabha-channel.html

நடிகர் ஷாருக்கானுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை

ஷாருக்கானுக்கு பிசிசிஐ எச்சரிக்கை
.
.
 புதுடெல்லி, மே 19: பிரபல இந்தி நடிகரும், ஐபிஎல் கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த அறைக்கு அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் சென்றார்.

ஆனால் அவர் வீரர்கள் தங்கும் அறைக்கோ, மைதானத்தில் வீரர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கோ செல்லக் கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு குழு கூறிவிட்டது.

ஐசிசி விதிகளின் படி தாம் அணி வீரர்களிடம் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஷாருக்கான் தெரிவித்தார்.

ஐசிசியின் இந்த செயல் தம்மை அதிருப்தி அடையச் செய்திருப்பதாக ஷாருக்கான் கூறினார். தாம் எப்போதும் வீரர்களுடன் இருந்து அவர்களை உற்சாகப்படுத்துவதாகவும், தமது அணி ஆடும் போட்டிகள் நடைபெறும் போது தாம் கொல்கத்தாவுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஐசிசி விதிகளை ஷாருக்கான மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.

மைதானத்தில் வீரர்கள் அமரும் பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது என்றும் அது கூறியுள்ளது.

இதனிடையே ஐபிஎல் போட்டிகளின் போது ஷாருக்கானின் நடத்தை குறித்து அவரிடம் விசாரணை நடத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை ஐசிசி கேட்டுக் கொண்டுள்ளது.


http://www.maalaisudar.com/newsindex.php?id=13643%20&%20section=1

அந்த அறையில் வைக்கப்பட்ட கேமராக்களின் கண்களில் சிக்கியவை வீடியோ இது-எச்சரிக்கை

கீழே கண்ட நான்கு விடியோ காட்சிகளும் அந்த அறைகளில் வைக்கப்பட்டிருந்த கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகள்.எவ்வளவு வலிமையான கட்டிடங்களும் இந்த சூழ்நிலைஇல் நிற்கப்போவதில்லை.மனித வாழ்வு என்பது பூவைப் போல் மறைந்து போகக்கூடியது என்பதை மீண்டும் நமக்கு எச்சரிக்கும் சத்தமாக இருந்தது சீனாவின் பூமி அதிர்ச்சி.அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளியே வரமுடியாமல் இருக்கும் அந்த மக்களின் துயரத்துக்கு ஒரு சில கண்ணீர் துளிகள்.















http://christhunesan.blogspot.com/2008/05/blog-post_6727.html

உயிருடன் ஆட்டை கடித்து குதறும் மனித முக மிருகங்கள் படங்கள்

உலக நாடுகள் அனைத்துக்கும் ஆன்மிக வழிக்கு முன்னோடியான இந்தியாவில் இன்றைக்கு ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் ஒரு சில சம்பவங்கள் ஒரு பெரிய வடுக்களாக மாறிவருவது ஒரு மறுக்க முடியாத உண்மைகளாகும்.உலகில் ஆன்மிகம் என்பதன் உண்மை விளக்கங்களை சித்தர்கள் மூலம் உலகம் கண்டு கொள்ள வகை செய்த இந்தியாவில் 21 நூற்றாண்டில் வல்லரசாக ஆயத்தமாகும் இந்தியாவின் கனவுக்கு ஒரு கேள்விக்குறியை உண்டு பண்ணும் நிலையை இச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றனர்.

இவைகளை ஆட்சியாளர்கள் சட்டம் கொண்டு அடக்க முடியாது.ஆனால் ஆன்மிக மக்கள் இத வெறுத்து ஒதுக்கினால் இவ்வித சடங்குகள் காணாமல் போய்விடும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.


 



http://epaper.dinamalar.com/Web/Photographs/2008/05/19/003/19_05_2008_003_002_001.jpg

ஆசி வழங்க சென்றபோது உலக கத்தோலிக்க தலைவர் போப் சுடப்பட்டார்-சுவடுகள்

 

 

ஆசி வழங்க சென்றபோது போப் ஜான்பால் சுடப்பட்டார் (காலச்சுவடுகள்)
 

ஆசி வழங்க சென்றபோது போப் ஜான்பால் சுடப்பட்டார் துருக்கி வாலிபன் கைது

ÚT֐ BPYŸ CWPÖY‰ ^ÖÁTÖ¥

 

போப் ஆண்டவரை, துருக்கி இளைஞன் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அடையச் செய்தது.

உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவரின் ஆட்சியின் கீழ் இருக்கும் வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில், முக்கிய பண்டிகைகளின்போது விசேஷ பூஜை _ பிரார்த்தனை கூட்டம் போன்றவை நடைபெறுவது வழக்கம். இதில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் செல்வார்கள்.

 
போப் ஆண்டவர் இரண்டாவது ஜான்பால்
இந்த விசேஷ பிரார்த்தனையில் போப் ஆண்டவர் கலந்து கொள்வார். பொதுமக்களுக்கு ஆசி வழங்குவார்.

சுடப்பட்டார்

அதுபோல, போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பால் 1981_ம் ஆண்டு மே 13_ந்தேதி செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு காரில் சென்றார். அங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தார்கள்.

கூட்டத்தில் இருந்த ஒரு மர்ம மனிதன் போப் ஆண்டவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். போப் ஆண்டவரின் வயிற்றில் 2 குண்டு பாய்ந்தது. இன்னொரு குண்டு கழுத்து அருகே பாய்ந்தது.

குண்டு பாய்ந்த இடங்களில் இருந்து ரத்தம் சொட்ட, போப் ஆண்டவர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்த உதவி யாளர்கள் அவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டார்கள்.
 
 

உடனே காரில் ஏற்றி, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு போப் ஆண்டவரின் வயிற்றிலும், குண்டு பாய்ந்த மற்ற இடங்களிலும் 2 மணி நேரம் அவசர ஆபரேஷன் நடந்தது.

பிரார்த்தனை

போப் ஆண்டவர் சுடப்பட்டதும் வாடிகன் நகர் டெலிவிஷனிலும், ரேடியோவிலும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

"போப் ஆண்டவர் சுடப்பட்டார். அவர் உயிர் பிழைக்க பிரார்த்தனை செய்யுங்கள்" என்று டெலிவிஷனிலும், ரேடியோவிலும் வேண்டுகோள்விடப்பட்டது. போப் ஆண்டவரை தரிசிக்கக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் அவர் சுடப்பட்டதை அறிந்து கதறி அழுதனர். மண்டியிட்டு அமர்ந்து, பிரார்த்தனை செய்தனர்.

போப் ஆண்டவரை நோக்கி சுட்டதில் 2 குண்டுகள் குறி தவறி கூட்டத்தில் இருந்த 2 பெண்கள் மீது பாய்ந்தன. அதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆன் ஓடர் (வயது 60), ஜமைக்காவைச் சேர்ந்த ரோஸ் ஹால் (21) என்பவரும் காயம் அடைந்தனர். அவர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள்.

முதல் தடவை

போப் ஆண்டவர் சுடப்படுவது வரலாற்றிலேயே இதுதான் முதல் தடவை.

இதற்கு முன் 1970_ம் ஆண்டில் அப்போதைய போப் ஆண்டவர் (6_வது போப்பால்) பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றபோது அவரை கத்தியால் குத்த முயற்சி நடந்தது. ஆனால் மயிரிழையில் தப்பிவிட்டார்.

போப் ஆண்டவர் சுடப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு, பிரதமர் இந்திராகாந்தி அதிர்ச்சி அடைந்தார். இந்த வன்முறை சம்பவத்துக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். இதேபோல உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்தும் மருத்துவ நிபுணர்கள் சென்று போப் ஆண்டவருக்கு சிகிச்சை அளித்தார்கள். தொடக்கத்தில் மிகவும் அபாய கட்டத்தில் இருந்த போப் ஆண்டவர், மெல்ல மெல்ல உடல் நலம் தேறி பூரண குணம் அடைந்தார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது அவர் தனது 61_வது பிறந்த நாளையும் கொண்டாடினார். போப் ஆண்ட வரை சுட்டவன், சம்பவ இடத்திலேயே பிடிபட்டான். அவனை போலீசார் கைது செய்தனர்.

அவனுடைய பெயர் முகமது அலி அகா. துருக்கி நாட்டைச் சேர்ந்தவன். 23 வயது இளைஞனான அவன், பயங்கரவாத கூட்டத்தைச் சேர்ந்தவன். துருக்கியில் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு சிறையில் இருந்தான். போப் ஆண்டவரை கொலை செய்ய, அவன் ஜெயிலில் இருந்தபோதே திட்டமிட்டு இருக்கிறான். "போப் ஆண்டவரை கொலை செய்வேன்" என்று கடிதம் எழுதி வைத்து விட்டு சிறையில் இருந்து தப்பினான். பல மாதங்கள் தலைமறைவாக திரிந்து பிறகு வாடிகன் நகரில் போப் ஆண்டவரை சுட்டான்..

CWPÖY‰ ^ÖÁTÖ¥ ‰TÖefVÖ¥ rPTyPÚTÖ‰.

 
இரண்டாவது ஜான்பால் துப்பாக்கியால் சுடப்பட்டபோது.
முகமது அலியிடம் ரோம் நகர போலீசார் விசாரணை நடத்தினார்கள். "யாருடைய தூண்டுதலின் பேரிலும் நான் போப் ஆண்டவரை சுடவில்லை. நானாகவேதான் அதைச்செய்தேன்" என்று அவன் போலீசாரிடம் தெரிவித்தான்.

மன்னிப்பு

தன்னை சுட்டவனை மன்னித்து விட்டதாக போப் ஆண்டவர் அறிவித்தார். அவர் மக்களுக்கு ஒரு செய்தி விடுத்தார். அவருடைய பேச்சு பதிவு செய்யப்பட்டு வாடிகன் ரேடியோவில் ஒலிபரப்பப்பட்டது.

அதில், "என்னுடன் இருப்பவர்களுக்கும், எனக்காக பிரார்த்தனை செய்பவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என்னுடன் காயம் அடைந்த 2 பேருக்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன். என்னைத் தாக்கிய சகோதரனை நான் முழுமையாக மன்னித்து விட்டேன். அவனுக்கும் பிரார்த்தனை செய்கிறேன்" என்று போப் ஆண்டவர் கூறியிருந்தார்.

போப் ஆண்டவர் ஜான்பால் குணம் அடைந்து திரும்பியதும் முகமது அலி அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்கு சென்று அவனை சந்தித்து பேசினார். அவனுக்காக பிரார்த்தனை நடத்தினார்.
 

இந்தியாவை தாக்க தயார் நிலையில் சீன ஏவுகணைகள்; செயற்கைக்கோள் படங்கள் மூலம் தகவல்

இந்தியாவை தாக்க தயார் நிலையில் சீன ஏவுகணைகள்; செயற்கைக்கோள் படங்கள் மூலம் தகவல் 

பெய்ஜிங், மே.18-

இந்தியாவுக்கு சீனா தொடர்ந்து பல ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்தியாவுக்கு சொந்தமான அருணாசல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஏற்கனவே ஆக்கிரமித்த இந்திய பகுதிகளையும் விட்டுத்தர மறுக்கிறது. மேலும், இந்தியாவுக்கு தொல்லை தரும் நோக்கத்தில் பாகிஸ்தானுக்கு அணு ஆயுத தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது.

சீனாவுடனான எல்லை பிரச்சினைகள் இன்னும் தீர்ந்த பாடில்லை. இந்நிலையில், சமீபத்தில் சீனாவின் ஹைனன் தீவில் கடலுக்கடியில் அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல் தளத்தை சீனா அமைத்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், இந்தியாவை குறிவைத்து சீனா ஏவுகணைகளை நிறுத்தி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவின் கிங்கை மாகாணத்தில் டெலிங்கா அருகே 2 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் 58 ஏவுகணை ஏவுதளங்களை சீனா அமைத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூட்டமைப்பு எடுத்த செயற்கைக்கோள் படங்களில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இந்த விஞ்ஞானிகள் கூட்டமைப்பு, அரசு சார்பற்ற அமைப்பாகும். உலக அளவில் அணு ஆயுதம் மற்றும் ஆயுதங்களை ஒழிக்கும் முயற்சியில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது.

இந்த படங்களை நன்றாக ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கூட்டமைப்பு, இந்த ஏவுதளங்கள், இந்தியாவின் வடமாநிலங்களையும், ரஷியாவின் தென்பகுதியையும் குறிவைத்து காணப்படுவதாக தெரிவித்தனர்.

இந்த ஏவுதளங்களில் இருந்து டிஎப்-21 ரக ஏவுகணைகள் பறக்க தயார் நிலையில் உள்ளன. இவை டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வடமாநிலங்கள் வரை வந்து தாக்கும் சக்தி படைத்தவை என்றும் விஞ்ஞானிகள் கூறினர். இந்த ஏவுகணைகள் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள் ஆகும். இவற்றில் அணுகுண்டுகளையும் ஏற்றி அனுப்ப முடியும்.

இந்த ஏவுகணைகளால் ரஷியாவின் தென்பகுதியையும் தாக்க முடியும். ஆனால் ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளுக்கு ஆபத்து இல்லை என்று விஞ்ஞானிகள் கூறினர்.
 
 

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடித்த கதாநாயகி நடிகைக்கு எயிட்ஸ் வியாதி!!!!!!!!

பிரசங்கி: 11:9. வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.10. நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.(பரிசுத்த வேதாகமம்)



ப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்!'' _ சினிமா நகைச்சுவைக் காட்சியன்றில் எய்ட்ஸ் விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் விவேக், இப்படி சிரிப்பைச் சிந்த விடுவார். அந்த வசனம், ஒரு சினிமா நடிகைக்கு மிகச் சரியாகப் பொருந்தி விட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்பு மொய்க்கக் கிடந்த அவரை, யாரும் சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அப்படியே ஆறுநாட்கள் அனாதையாகக் கிடந்தார் அந்த நடிகை. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்த அந்த நடிகை நிஷா என்கிற நூருன்னிசா.

'இளமை இதோ இதோ', 'முயலுக்கு மூனுகால்,' 'மானாமதுரை மல்லி', 'எனக்காகக் காத்திரு' போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்த நிஷாவின் பிறந்த ஊரே நாகூர்தான் என்பது இன்னொரு அதிர்ச்சிச் செய்தி. அவரது அப்பா, பெரியப்பா, அத்தை என ஓர் உறவினர் பட்டாளமே அந்த ஊரில் வசதியுடன் வாழ்ந்து வருவது,
அதைவிட அதிர்ச்சியான செய்தி.

ஒரு முஸ்லிம் அமைப்பு மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நடைப்பிணமாக, ஒரு கட்டிலில் கிடந்த நடிகை நிஷாவை நாம் சந்தித்தோம். இளமைக் காலங்களில் நடித்த நிஷாவா இவர் என திகைக்கும் வண்ணம் காய்ந்த கருவாடாக கட்டிலில் கிடந்தார். நாம் குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து வருகிறோம் என்றதும் முகத்தில் மலர்ச்சியை வரவழைத்துக் கொண்ட அவர், ''சார்! சார்! என்னை போட்டோ எடுங்க சார்! என் நிலையைப் பற்றி பத்திரிகையில் எழுதி என்னைக் காப்பாற்றுங்க சார். நான் மறுபடியும் நடிக்கனும்!'' என்று கதறினார்.
சினிமா ஸ்பாட் லைட்களின் ஒளிவெள்ளத்தில் குளித்த ஒருவர், இப்படி தன்னை ஒரு போட்டோ எடுக்கும்படி கெஞ்சியது நம்மை உறுத்தியது. நிஷாவிடம் பேசினோம். என்னதான் எலும்பும் தோலுமாக இருந்தாலும் அவரது பேச்சில் ஒரு நடிகைக்குரிய நளினம் குறையவில்லை. கூடவே குரலில் சோகத்தைக் கொட்டிக் குழைத்து நம்மிடம் பேசினார்.
''எனக்குச் சொந்த ஊர் நாகூர்தான். அப்பா பேர் அப்துல் ஜப்பார். அவரது முதல் மனைவி பேபிக்குப் பிறந்த பெண்தான் நான். குழந்தையாக நான் இருந்த போது அப்பாகிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா என்னைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்திட்டாங்க. என்னை வளர்த்து, சினிமாவில் நடிக்க வச்சாங்க. பல படங்களில் ஹீரோயினா நடித்தேன். நடிகர் கமலோடு 'டிக்...டிக்....டிக்', ரஜினி சாரோட 'ஸ்ரீராகவேந்திரர்', பாலசந்தர் சாரோட 'கல்யாண அகதிகள்' இன்னும் விசு சார், சந்திரசேகர் சார் டைரக்ஷனில் கூட நடிச்சிருக்கேன்'' என்றவர் தொடர்ந்தார்.

''அம்மா இறந்த பிறகு அந்த துக்கத்தில் சரியாகச் சாப்பிடாமல் மெலிந்து விட்டேன். நடிக்கிறதையும் விட்டுட்டேன். பேங்கில் சேமிச்சு வைச்ச பணமெல்லாம் கரைஞ்சு போச்சி. எனக்கு சென்னையில் உறவுன்னு சொல்லிக்கொள்ள ஒருத்தரும் இல்லை. அனாதையாக இருந்த எனக்கு உதவி செய்யவும் ஆளில்லை. நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் ஒருமுறை உதவி கேட்டுப் போனேன். 'உனக்கு
சினிமாவில் சான்ஸ் கிடைக்கலேன்னா, டி.வி.யில் நடிக்க வேண்டியது தானே'ன்னு சொல்லி, என்னை வெறும் கையோட திருப்பியனுப்பிவிட்டார்.

நடிகர் சுமன், சந்திரசேகர், நடிகை ராதிகா எல்லோருமே என் மேல் ரொம்பப் பாசமா இருப்பாங்க. நான் இப்படி படுத்த படுக்கையாகக் கிடப்பது அவங்களுக்குத் தெரியுமோ என்னவோ!'' என்றார் கண்ணீருடன். 'உங்கள் அப்பா மற்றும் உறவுகள் உங்களை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?' என்று கேட்டோம். அதைக் கேட்டதும் சற்று கோபப்பட்ட நிஷா, ''நான் வசதியாக இருந்த காலத்தில் என்னிடம் நிறைய வாங்கிக்கொண்ட அவர்கள், இப்போது என்னைக் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். என் பெரியப்பா அப்துல் ஹமீதுவின் மகள் நிக்காவின்போது, தாலிக்கு நான் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தேன். அதை அவர்கள் மறந்து விட்டார்கள். சொந்த ஊரில்... பெற்ற தந்தையின்
கண்முன்பே ரோட்டில் ஈ, எறும்பு மொய்க்க அனாதையாகக் கிடந்த நிலைமை என்னைத் தவிர, வேறு யாருக்கும் வராது' என்றவர் குரல் உடைந்து போய் அழத் தொடங்கினார்.
அதன் பிறகு, ''சார் தப்பா நினைக்காதீங்க. கையில் சுத்தமாக காசே இல்லை. ஒரு முட்டை புரோட்டா சாப்பிடனும்போல ஆசையாக இருக்கு! ஒண்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்களேன், ப்ளீஸ்!'' என்று கெஞ்சினார்.
நம்முடன் வந்திருந்த நண்பரொருவர் ஓடிச்சென்று அவர் கேட்டதை வாங்கிக் கொடுத்தார். நிஷா, சென்னை பல்லாவரத்தில் அவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருந்த மகியம்மா என்பவரிடம் அலிபாய், ரபீர் என்பவர்கள் மூலமாக நகை மற்றும் பணத்தைக் கொடுத்து வைத்திருப்பதாகவும், நகையன்றை அடகு வைத்து அந்தப் பணத்தில் வாடகைக் கார் பிடித்து அலிபாய் மூலம்தான் நாகூர் வந்து சேர்ந்ததாகவும் நிஷா நம்மிடம் விவரித்தார். தந்தை மற்றும் உறவினர்கள் ஏற்க மறுத்து விட்ட நிலையில், நாகூர் தர்கா அருகே அவர் அனாதையாக விடப்பட்டிருக்கிறார்.
நடிகை நிஷாவிடம் நாம் பேசிக் கொண்டிருந்தபோது, நர்ஸ் ஒருவர் விடுவிடென்று வந்து நம்மை, அப்பால் அழைத்துச் சென்றார். ''அந்தம்மாவுக்கு ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ்னு ரிசல்ட் வந்திருக்கு. அவங்களை தாம்பரத்திலுள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கான ஆஸ்பத்திரிக்கு அனுப்ப நீங்கள் ஏற்பாடு செய்யுங்களேன்!'' என்றார்
இரக்கக் குரலில். நடிகை நிஷா தன்னை எய்ட்ஸ் நோய் தாக்கியிருக்கிறது என்பது கூடத் தெரியாமல் இன்னும் இருக்கிறார் என்ற தகவல் நம்மை உலுக்கியது. நாகூரில் வசிக்கும் நிஷாவின் தந்தை அப்துல் ஜப்பாரைச் சந்தித்தோம். ''நிஷா எனக்குப் பிறந்தவள்தான். அவளோட அம்மா பேபியை நான் லவ் பண்ணி திருமணம் செய்ததால், பெற்றோர் என்னை வீட்டை விட்டு விரட்டிட்டாங்க. அப்ப பிறந்தவதான் நிஷா. 'கொஞ்ச நாள் பொறு'ன்னு நான் சொன்னதைக் கேட்காமல், குழந்தையைத் தூக்கிக்கிட்டு ராவோட ராவா பேபி சென்னைக்கு ஓடிப் போயிட்டா. அதன் பிறகு, பேபியைத் தேடியலைஞ்சு கோடம்பாக்கத்தில் கண்டுபிடித்தேன். எனக்குத் தெரியாமல் அடிக்கடி அவள் வீடு மாற ஆரம்பிச்சா. தான் ஜலீல்னு ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டதாகச்
சொன்னாள். நிஷாவை என் கண்ணில் காட்டாமல் மறைச்சிட்டாள். பேபிக்கு பலபேரோட தவறான தொடர்பிருந்தது. நிஷாவை சினிமாவில் நடிக்க வைத்ததால் பணம் வர ஆரம்பித்தது. அதனால், ''உனக்கு ஊரில் பல பொம்பிளைகளோடு தொடர்பிருக்கு. இனிமே இங்கே வராதேன்னு என்னை விரட்டிட்டா'' என்றார்.

'உங்களுக்கு எத்தனை மனைவிகள்?' என்று ஜப்பாரிடம் கேட்டோம். ''மனைவி என்றால் அது பேபி மட்டும்தான். ஆனால் நாலைந்து பெண்களோடு தொடர்பு உண்டு. எனக்கும் ஓர் இந்துப் பெண்னுக்கும் பிறந்த பையனை முஸ்லிமாக மாத்தி ஷாகுல் அமீதுன்னு பெயர் வைத்து வளர்க்கிறேன்'' என்றார். மீண்டும் தொடர்ந்த அவர், ''பேபி இறந்தபோது எனக்கு தகவல் சொல்லவில்லை. என் அண்ணன் அங்கே போனபோது, 'எனக்கு அப்பாவே வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்புறம் பெரியப்பா எதுக்கு?'ன்னு கேட்டு, நிஷா அவரை விரட்டியிருக்கா. இப்ப நோய் வந்து, சொந்தம் கொண்டாட வந்தா அவளை யார் ஏற்பார்கள்? நானே என் தங்கச்சி வீட்டில் ஓசிச் சாப்பாடு சாப்பிடறேன்.

இதில் அவளையும் வச்சி எப்படிக் காப்பாத்த முடியும்?'' என்றார் அப்துல் ஜப்பார். நிஷாவின் பெரியப்பா அப்துல் ஹமீதைச் சந்தித்தோம். ''சென்னை சாந்தோமில் மலாக்கா சூப்பர் மார்க்கெட் வச்சிருக்கிற முகமது அலியும், ரபீக்கும் அவளை ஆண்டு அனுபவிச்சிட்டு, இப்போ அவங்க பாட்டுக்கு இங்கே விட்டுட்டுப் போயிட்டாங்க. இதுல நாங்க எதுவும் செய்ய முடியாது' என்றார் போட்டோவுக்கு மறுத்தபடி.
நாகூர் ஜமாத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நிஜாமுதீனுடன் பேசினோம். ''ஒரு நடிகை எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணம் இந்த நிஷா. இப்போ வருத்தப்பட்டு எந்தப் புண்ணியமும் இல்லை'' என்று முடித்துக்கொண்டார்.

அடுத்து நாகை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகியும், பொதுநல ஆர்வலருமான நாகூர் பாரி, ''நலிந்த கலைஞர்களுக்குக் கிடைக்கும் உதவி நிஷாவுக்குக் கிடைத்தால் நல்லது! திரையுலகைச் சேர்ந்தவர்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்'' என்றார்.
'சென்னை சாந்தோமில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் அலிபாய் என்கிற முகமது அலியை கடைசியாகத் தொடர்பு கொண்டு கேட்டோம். ''அந்தப் பொண்னும் அவங்க அம்மாவும் இங்கே அனாதைகளாக இருந்தபோது உதவினோம். நிஷாவின் அம்மா இறந்தபோது கூட உறவுக்காரங்க யாரும் வரவில்லை. இவர்களுக்கு
உதவப்போய் இப்போது எங்களுக்குக் கெட்ட பெயர். உடல்நிலை சரியில்லாத நிஷா, அவரது நகை ஒன்றை அடகு வைத்தார். அந்தப் பணத்தில்தான் கார் ஒன்றை வைத்து அவரைக் கொண்டு போய் நாகூரில் விட்டுவரச் சொல்லி ஏற்பாடு செய்தோம்.நிஷாவை உறவினர்கள் ஏற்க மறுத்ததால், நாகூர் தர்காவில் தன்னை விடச்சொல்லி நிஷாவே சொன்னதால்தான் அங்கே விட்டு விட்டு வந்தோம். நிஷா பல்லாவரத்தில் அவரது எதிர் வீட்டில் குடியிருந்த மகியம்மாவிடம்தான் மீதி நகைகளைக்
கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்' என்றவர், அதைத் தொடர்ந்து நாம் கேட்ட சில கேள்விகளால் கோபமடைந்து மிரட்டலுடன் போன் தொடர்பைத் துண்டித்துக்கொண்டார்.

அடுத்த சில மணி நேரத்தில் முகமது அலியின் செல்போன் மூலம் மகியம்மா என்பவர் நம்மிடம் பேசினார்.
''என்னிடம் மொத்தம் மூனு பவுன் நகையைத்தான் நிஷா கொடுத்தார். அதற்கு பதினான்காயிரம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டேன். நகைக்கு அது சரியாப் போச்சு. நிஷா இருபத்து நான்கு புடைவை கொடுத்தார். அதில் இருபது புடைவைகளை தலா நூறு ரூபாய்க்கு விற்று அவரிடம் காசு கொடுத்துவிட்டேன். மீதமிருப்பது நான்கு புடைவைகள்தான்'' என்றார்.

''முகமது அலிக்கும் நிஷாவுக்கும் நீண்டகாலமாகத் தொடர்புண்டு' என்று அவர் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, அந்த செல்போனைப் பிடுங்கிய முகமது அலி, ''நிஷா இந்தப் பகுதிக்கு வந்த பிறகுதான் அவரை எனக்குத் தெரியும். அவரோடு எனக்கு முப்பது வருஷப் பழக்கம் என்பதெல்லாம் பொய்!'' என்றார் கோபத்தோடு. கடைசியாகக் கிடைத்த தகவலின்படி அப்துல் ஜப்பாரின் மகன் ஷாகுல்அமீது, ஒரு முஸ்லிம் அமைப்பின் உதவியுடன் நிஷாவை சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் அட்மிட் செய்ததாக நமக்குத் தெரிய வந்தது.

நிஷா குறித்து ஃபிலிம்நியூஸ் ஆனந்தனிடம் பேசினோம். அவரது நிலை பற்றி மிகவும் வருத்தப்பட்ட அவர், ''அவ தைரியமான பொண்னு. ஒருமுறை இன்கம்டாக்ஸ் ஆபீஸர்னு சொல்லி போலி ரெய்டுக்கு வந்து பிளாக்மெயில் செய்ய முயன்ற ஒரு படத் தயாரிப்பாளரை, அவளே போலீஸ§க்கு போன் பண்ணிப் பிடித்துக்கொடுத்தாள். அப்படிப்பட்டவளுக்கா இப்படியரு நிலைமை?'' என்றார் நிஜமான வருத்தத்தோடு.

http://chittarkottai.com/general/nisha.htm