ஒவ்வொரு உறுப்புக்களையும் மும்முறை கழுவுதல் சுன்னத்து ,இதைவிட கூடுதலாகச் செய்பவர், முறைதவறியவராகவும், எல்லை மீறியவராகவும், அக்கிரமக்காரராகவும் ஆகிவிடுவர்

ஐயம் : ஒளூ செய்யும்போது, ஒவ்வொரு உறுப்புக்களையும் மும்முறை கழுவுதல் சுன்னத்து என்று அறிந்திருந்தும், சில சமயங்களில் மனதிருப்திக்காக, நான்கு அல்லது ஐந்து முறை கழுவும் நிலை ஏற்பட்டு விடுகிறதே, இவ்வாறு செய்வது இஸ்ராஃப்(விரையம்) ஆகுமா? குற்றமா? அதைத் தவிர்க்க வழி என்ன?

பர்ஸானா, கீழக்கரை.

தெளிவு : நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து ஒளூ பற்றிக் கேட்கலானார். அதற்கவர்கள் ஒவ்வொன்றையும் மூம்மூன்று முறைகள் செய்து காட்டிவிட்டு, இதைவிட கூடுதலாகச் செய்பவர், முறைதவறியவராகவும், எல்லை மீறியவராகவும், அக்கிரமக்காரராகவும் ஆகிவிடுவர் என்றார்கள்.


http://www.annajaath.com/?p=341

0 comments: